அமெரிக்காவின் மொத்த தேசியக் கடன் வரலாற்றில் முதல் முறையாக 40 டிரில்லியன் டொலர்களை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க திறைசேரி இந்த தகவலை உறுதி செய்துள்ளது.
இதன்படி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் இந்தக் கடன் அளவு மிக விரைவாக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில், கடுமையான கடன் வாங்குதல், அதிகரித்த செலவினங்கள் மற்றும் குறைந்த வரிகள் போன்ற காரணங்களால் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவில் நிதி நெருக்கடி ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா பெருந்தொற்று போன்ற நெருக்கடிகளால், அமெரிக்க அரசாங்கம் அதிகளவில் கடன் வாங்கிச் செலவிட நேரிட்டது.
வயதான மக்களுக்கான ஓய்வூதியம் மற்றும் உடல்நலப் பாதுகாப்புச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், அதற்கு ஏற்ப வரி வருவாய் உயரவில்லை.
இந்தநிலையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது கடனுக்கான வட்டியாக மட்டுமே ஆண்டுதோறும் சுமார் 1.1 டிரில்லியன் டொலர்களைச் செலுத்த வேண்டியுள்ளது.
தற்போது அதிகரித்து வரும் இந்தக் கடன் சுமை எதிர்காலத்தில் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வரியுயர்வு போன்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசைத் தள்ளக்கூடும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
Latest News
அது நான் இல்லை இருந்தாலும் அதில் என்ன தவறு? - விஜய்யின் அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Local
24 August 2026
அமெரிக்காவில் தயாரிப்பு என பொய் விளம்பரம்: ட்ரம்ப் மொபைல் T1 ஸ்மார்ட்போனால் அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்!
Local
24 August 2026
உலகளவில் வெளியாகும் பிரம்மாண்ட ‘ராமாயணம்’ திரைப்படம் – 2,000 கோடி ரூபாய்க்கும் அதிக முதலீடு!
Local
24 August 2026
நீதிமன்றத்தை அவமதிப்பு: 6 பேருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தகவல் சமர்ப்பிப்பு
Local
24 August 2026
வெப்ப அலைகளின் தாக்கம் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்
Local
24 August 2026
அரசாங்கத்திற்கு எச்சரிக்கை: தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சல்லேவுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி தலைமையிலான அரசே முழுப் பொறுப்பு!
Local
24 August 2026
தனியார் துறை ஊழியர்களுக்கான இணையவழி தொடருந்து பருவச்சீட்டு முறைமை அறிமுகம்
Local
24 August 2026
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை: யாழ்ப்பாணத்தில் மூன்று வர்த்த நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்
Local
24 August 2026
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு புதிய மின்சார தொடருந்து திட்டம்: பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கம்
Local
24 August 2026
போலி மருத்துவர்கள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் அபராதம்
Local
24 August 2026