ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்தது தொடர்பான செய்தி அதிகமாக பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பாடசாலையில் பாலர் வகுப்பில் படித்து வந்த 6 வயது சிறுவன் பிரனாய் தேஜ், வீட்டுப்பாடம் முடிக்கவில்லை எனக் கூறி ஆசிரியை ஒருவர், சிறுவனது கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதன்போது ஆசிரியை அடித்த சில நொடிகளிலேயே அதிர்ச்சியில் உறைந்த சிறுவன், ஆசிரியையின் மடியிலேயே மயங்கி வீழ்ந்துள்ளார்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோதும் அங்கு சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பெற்றோரின் முறைப்பாட்டின்கீழ் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
கொழும்பில் அதிகரிக்கும் எலித் தொல்லை – மக்கள் அச்சம்
Local
28 August 2026
கையடக்கத் தொலைபேசி வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
Local
28 August 2026
நேபாளத்திற்கு 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் அவசரகால நிவாரணம் அறிவிப்பு - அவுஸ்திரேலியா தீர்மானம்
Local
28 August 2026
நேபாள பேரிடர்: தொடர்ந்து கைகொடுக்கும் இந்தியா – இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு!
Local
28 August 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் மாதம் இலங்கைக்கு விஜயம்
Local
28 August 2026
நவோதயபுரம் வீட்டுத்திட்டம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
Local
28 August 2026
தக்காளிக் குளியலில் திளைத்த ஸ்பெயின் - கோலாகலமாக நடைபெற்ற 'லா டொமாட்டினா' திருவிழா
Local
28 August 2026
உச்சக்கட்ட திருப்பம்: சீமானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய விஜயலட்சுமி!
Local
28 August 2026
வடக்கு தொடருந்து மார்க்கத்தின் போக்குவரத்துச் சேவைகளில் பாதிப்பு
Local
28 August 2026
தமிழகத்தில் நலத்திட்டங்களை சொந்தப்பணத்தில் செய்யும் விஜய்?
Local
28 August 2026