International21 August 2026

ஆந்திராவில் அதிர்ச்சி: ஆசிரியர் மடியிலேயே வீழ்ந்து மரணமான மாணவன்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்தது தொடர்பான செய்தி அதிகமாக பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது.

விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பாடசாலையில் பாலர் வகுப்பில் படித்து வந்த 6 வயது சிறுவன் பிரனாய் தேஜ், வீட்டுப்பாடம் முடிக்கவில்லை எனக் கூறி ஆசிரியை ஒருவர், சிறுவனது கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதன்போது ஆசிரியை அடித்த சில நொடிகளிலேயே அதிர்ச்சியில் உறைந்த சிறுவன், ஆசிரியையின் மடியிலேயே மயங்கி வீழ்ந்துள்ளார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோதும் அங்கு சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பெற்றோரின் முறைப்பாட்டின்கீழ் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes