நடிகர் விக்ரம் லார்க் கிப்பான் குரங்குடன் சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள பண்ணை ஒன்றில் வனத்துறையினர் அதிரடியாகச் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, பெருந்துறையைச் சேர்ந்த கேசவநாதன் என்பவருக்குச் சொந்தமான பண்ணையில் உரிய ஆவணங்களின்றிப் பராமரிக்கப்பட்டு வந்த 11 அரியவகை வெளிநாட்டு வன விலங்குகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த பண்ணையில் வளர்க்கப்பட்ட குரங்குடனேயே நடிகர் விக்ரம் காணொளியை வெளியிட்டிருந்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகளில், 7ஆப்பிரிக்கன் சர்வல் பூனைகள், 2 லார்க் கிப்பான் குரங்குகள் மற்றும் 2 கெப்புசின் குரங்குகள் அடங்குகின்றன.
இந்தநிலையில், பறிமுதல் செய்யப்பட்டுள்ள விலங்குகள் அனைத்தும் தற்போது அந்தப் பண்ணையிலேயே வனத்துறையின் பாதுகாப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, அவை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அல்லது அங்கீகரிக்கப்பட்ட மீட்பு மையத்திற்கு மாற்றப்படும் என்று மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
Latest News
கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி : காணொளியை வெளியிட்டு ரசிகர்களை எச்சரித்த நடிகை சமந்தா!
Local
27 August 2026
கடல் வளத்தைப் பாதுகாக்க புதிய முயற்சி – நிலாவெளியில் உருவாகும் பவள அருங்காட்சியகம்!
Local
27 August 2026
காதலைச் சொல்ல இப்படியொரு பிரம்மாண்டமா? - இணையத்தை அதிரவிட்ட யூடியூபர்!
Local
27 August 2026
முதல் முதலீடு : அதுவும் யாழ் அணிக்காக -கிரிக்கெட்டைத் தாண்டி புதிய களத்தில் மதீஷ
Local
27 August 2026
"நிலநடுக்கம் அல்ல.. திபெத் பனிப்பாறை சரிவுதான் காரணம்" - நேபாள பேரழிவு குறித்து வெளிவந்த அதிரடித் தகவல்!
Local
27 August 2026
நேபாளத்தின் பேரிடர் மீட்புக்கு கைகொடுக்கும் இலங்கை - வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவசர தொலைபேசி உரையாடல்!
Local
27 August 2026
கிலியன் எம்பாப்பேவின் ஹெட்ரிக் கோல்: ரியல் சோசியட் அணிக்கு எதிரான போட்டியில் ரியல் மட்ரிட் அபார வெற்றி!
Local
27 August 2026
தாய் இழந்த பன்றிக் குட்டிக்கு பால் கொடுத்த பசு – நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்!
Local
27 August 2026
மதவாச்சி பிரதான வீதியில் விபத்து - மூவர் உயிரிழப்பு
Local
27 August 2026
சூரிய மின்படலங்களை பயன்படுத்துபவர்களுக்கான அவரச அறிவிப்பு
Local
27 August 2026