International21 August 2026

நடிகர் விக்ரமால் பண்ணைக்கு வந்த சோதனை: பாய்ந்த அதிகாரிகள்!

நடிகர் விக்ரம் லார்க் கிப்பான் குரங்குடன் சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள பண்ணை ஒன்றில் வனத்துறையினர் அதிரடியாகச் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, பெருந்துறையைச் சேர்ந்த கேசவநாதன் என்பவருக்குச் சொந்தமான பண்ணையில் உரிய ஆவணங்களின்றிப் பராமரிக்கப்பட்டு வந்த 11 அரியவகை வெளிநாட்டு வன விலங்குகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த பண்ணையில் வளர்க்கப்பட்ட குரங்குடனேயே நடிகர் விக்ரம் காணொளியை வெளியிட்டிருந்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகளில், 7ஆப்பிரிக்கன் சர்வல் பூனைகள், 2 லார்க் கிப்பான் குரங்குகள் மற்றும் 2 கெப்புசின் குரங்குகள் அடங்குகின்றன.

இந்தநிலையில், பறிமுதல் செய்யப்பட்டுள்ள விலங்குகள் அனைத்தும் தற்போது அந்தப் பண்ணையிலேயே வனத்துறையின் பாதுகாப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, அவை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அல்லது அங்கீகரிக்கப்பட்ட மீட்பு மையத்திற்கு மாற்றப்படும் என்று மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes