General21 August 2026

நந்தா மாலினி மறைவையொட்டி அரச நிறுவனங்களில் 3 நாட்களுக்கு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்

பழம்பெரும் சிங்கள மொழிப் பாடகி விஷாரத நந்தா மாலினியின் மறைவையொட்டி, இன்று (21) முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் கலைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையிலும், அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes