இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில், பாடசாலை அதிபர் ஒருவர் 27 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 10ஆம் தரத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள நாகார்ஜுனா பொதுப் பாடசாலையின் அதிபரும் பணிப்பாளருமான கல்லு ரூபா ரெட்டி , கடந்த 12ஆம் திகதி தனது இல்லத்தில் உடலமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருட்டு நோக்கில் மாணவர் இருவரும் குறித்த அதிபரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். எனினும், அதிபர் அவர்களை அடையாளம் கண்டுகொண்டதைத் தொடர்ந்து, அவரை 27 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர் .
இதற்கு முன்னர், மாணவர்களின் பைகளில் பணமும் கையடக்கத் தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதிபர் அவர்களை எச்சரித்திருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து கோவாவுக்குத் தப்பிச் சென்ற மாணவர்களிடமிருந்து இந்திய மதிப்பில் 154,000 ரூபாய் பணமும், திருடப்பட்ட பணத்தில் வாங்கியதாகக் கூறப்படும் ஐபோன் மற்றும் அதிபரின் கையடக்கத் தொலைபேசி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த மாணவர்கள் குறுகிய காலத்தில் எளிதாகப் பணம் சம்பாதிப்பது எவ்வாறு என்பது குறித்த தகவல்களை இணையத்தில் தேடியிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள நாகார்ஜுனா பொதுப் பாடசாலையின் அதிபரும் பணிப்பாளருமான கல்லு ரூபா ரெட்டி , கடந்த 12ஆம் திகதி தனது இல்லத்தில் உடலமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருட்டு நோக்கில் மாணவர் இருவரும் குறித்த அதிபரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். எனினும், அதிபர் அவர்களை அடையாளம் கண்டுகொண்டதைத் தொடர்ந்து, அவரை 27 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர் .
இதற்கு முன்னர், மாணவர்களின் பைகளில் பணமும் கையடக்கத் தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதிபர் அவர்களை எச்சரித்திருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து கோவாவுக்குத் தப்பிச் சென்ற மாணவர்களிடமிருந்து இந்திய மதிப்பில் 154,000 ரூபாய் பணமும், திருடப்பட்ட பணத்தில் வாங்கியதாகக் கூறப்படும் ஐபோன் மற்றும் அதிபரின் கையடக்கத் தொலைபேசி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த மாணவர்கள் குறுகிய காலத்தில் எளிதாகப் பணம் சம்பாதிப்பது எவ்வாறு என்பது குறித்த தகவல்களை இணையத்தில் தேடியிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Latest News
லண்டனில் இரு துருவங்கள் - பல கோடி மக்களின் எதிர்பார்ப்பு: சில்வர்ஸ்டோன் பந்தயத்தைத் தொடங்கி வைக்கிறார் விஜய்!
Local
12 September 2026
அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் "ஜனசதன" பேரணி
Local
12 September 2026
டொனால்ட் ட்ரம்பின் வருகை: அயர்லாந்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
Local
12 September 2026
மூன்றாவது போட்டியிலும் வெல்லுமா இங்கிலாந்து ?
Local
12 September 2026
பாகிஸ்தான் மகளிர் அணியை தோற்கடித்த இலங்கை மகளிர் அணி
Local
12 September 2026
பாதாள உலகக் குழுக்களின் கைகளில் விடுதலை புலிகளின் கைஎறி குண்டுகள்? காவல்துறையினர் அதிரடி சந்தேகம்
Local
12 September 2026
இலங்கை ஆசிரியர் சேவையில் வினைத்திறன் தடைத் தேர்வுகளுக்கு சலுகை: அரச சேவை ஆணைக்குழு அனுமதி
Local
12 September 2026
இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள ஈரானியக் கப்பல் மாலுமிகளை மாற்ற அனுமதி
Local
12 September 2026
ரொபோக்களின் விநோத போராட்டம்: மனிதர்களுக்குப் பதிலாக களமிறங்கி கோரிக்கை விடுத்த இயந்திர மனிதர்கள்!
Local
11 September 2026
கனடாவின் புதிய சாதனை: நயகரா ஆற்றில் உருவாக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்கள்!
Local
11 September 2026