இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில், பாடசாலை அதிபர் ஒருவர் 27 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 10ஆம் தரத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள நாகார்ஜுனா பொதுப் பாடசாலையின் அதிபரும் பணிப்பாளருமான கல்லு ரூபா ரெட்டி , கடந்த 12ஆம் திகதி தனது இல்லத்தில் உடலமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருட்டு நோக்கில் மாணவர் இருவரும் குறித்த அதிபரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். எனினும், அதிபர் அவர்களை அடையாளம் கண்டுகொண்டதைத் தொடர்ந்து, அவரை 27 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர் .
இதற்கு முன்னர், மாணவர்களின் பைகளில் பணமும் கையடக்கத் தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதிபர் அவர்களை எச்சரித்திருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து கோவாவுக்குத் தப்பிச் சென்ற மாணவர்களிடமிருந்து இந்திய மதிப்பில் 154,000 ரூபாய் பணமும், திருடப்பட்ட பணத்தில் வாங்கியதாகக் கூறப்படும் ஐபோன் மற்றும் அதிபரின் கையடக்கத் தொலைபேசி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த மாணவர்கள் குறுகிய காலத்தில் எளிதாகப் பணம் சம்பாதிப்பது எவ்வாறு என்பது குறித்த தகவல்களை இணையத்தில் தேடியிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள நாகார்ஜுனா பொதுப் பாடசாலையின் அதிபரும் பணிப்பாளருமான கல்லு ரூபா ரெட்டி , கடந்த 12ஆம் திகதி தனது இல்லத்தில் உடலமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருட்டு நோக்கில் மாணவர் இருவரும் குறித்த அதிபரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். எனினும், அதிபர் அவர்களை அடையாளம் கண்டுகொண்டதைத் தொடர்ந்து, அவரை 27 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர் .
இதற்கு முன்னர், மாணவர்களின் பைகளில் பணமும் கையடக்கத் தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதிபர் அவர்களை எச்சரித்திருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து கோவாவுக்குத் தப்பிச் சென்ற மாணவர்களிடமிருந்து இந்திய மதிப்பில் 154,000 ரூபாய் பணமும், திருடப்பட்ட பணத்தில் வாங்கியதாகக் கூறப்படும் ஐபோன் மற்றும் அதிபரின் கையடக்கத் தொலைபேசி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த மாணவர்கள் குறுகிய காலத்தில் எளிதாகப் பணம் சம்பாதிப்பது எவ்வாறு என்பது குறித்த தகவல்களை இணையத்தில் தேடியிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Latest News
தாய்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவித்தல்
Local
07 September 2026
கேப் வெர்டெவின் போகோ தீவில் கோர விபத்து: பெரும்பாலான சிறுவர்கள் உட்பட்ட 25 பேர் பலி
Local
07 September 2026
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
Local
07 September 2026
பொதுப்பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் சிறை செல்வது நிச்சயம்- டில்வின் சில்வா எச்சரிக்கை
Local
07 September 2026
நிதிப் பற்றாக்குறையால் முடங்கிய சமூக சமையலறைகள்: காஸாவில் தீவிரப் பட்டினி!
Local
07 September 2026
ஒரே நாளில் இருவேறு விபத்துக்கள்: ஓடுதளத்தை விட்டு வெளியேறிய வானுார்தி: இடிபாடுகளில் சிக்கி மாணவர்கள் பலி!
Local
07 September 2026
60 குழந்தைகள் உட்பட 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்கு: உறைந்துபோன உறவினர்கள்!
Local
07 September 2026
பிஃபா தலைவர் தேர்தலில் மீண்டும் ஜியானி இன்ஃபான்டினோ போட்டி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Local
07 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் வெடித்த போர்: அமெரிக்கா - ஈரான் இடையே தீவிரமடையும் பலப்பரீட்சை!
Local
07 September 2026
பனிப்பாறை சரிவால் கோரத் தாண்டவம்: 13-வது நாளாகத் தீவிரமடையும் தேடுதல் வேட்டை!
Local
07 September 2026