General21 August 2026

வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை அன்னாசிப்பழங்கள்!

இலங்கையின் அன்னாசிப்பழங்களை முதன்முறையாக பாகிஸ்தான் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொதியிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் உள்ளிட்ட பல பிரிவுகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

பாகிஸ்தானில் அன்னாசிப்பழங்களுக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு நிலவுவதுடன், அவர்கள் ஆண்டிற்கு சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அன்னாசிப்பழங்களை இறக்குமதி செய்கின்றனர்.

தற்போது தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு அன்னாசிப்பழங்களை ஏற்றுமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes