கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் அண்மையில் இடம்பெற்ற சுகாதார ஊழியர்களின் சீருடை தொடர்பான பிரச்சினை, சமூகங்களுக்கிடையில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் மாற்றப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கவலை வெளியிட்டுள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
குறித்த நிலைமையை சீர்செய்யும் வகையில், சுகாதார அமைச்சரினால் தற்காலிக தீர்வாக ஒரு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான சுற்றறிக்கைகளை சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைகள் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
ஒரு நாட்டின் சட்டம் அல்லது சுற்றறிக்கை அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்றும், அதனை நிறுவனத் தலைவர்கள் தன்னிச்சையாக மாற்றியமைக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்காலிக தீர்வாக பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் அருகிலுள்ள வேறு மருத்துவமனைக்கு இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சு, நாடாளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி, சீருடை ஒழுங்குமுறைகளில் திருத்தங்களை மேற்கொண்டு நிரந்தர தீர்வைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
Latest News
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை: யாழ்ப்பாணத்தில் மூன்று வர்த்த நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்
Local
24 August 2026
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு புதிய மின்சார தொடருந்து திட்டம்: பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கம்
Local
24 August 2026
போலி மருத்துவர்கள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் அபராதம்
Local
24 August 2026
தேசிய மக்கள் சக்தி நகர சபை உறுப்பினரின் மகன் உட்பட இருவர் போதைப்பொருளுடன் கைது!
Local
23 August 2026
அளுத்கமவில் தொடருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து: ஒருவர் பலி; மற்றொருவர் காயம்!
Local
23 August 2026
‘Diamond Excellence விருதுகள் 2026 - ஹிரு ஊடகப் வலையமைப்புக்கு பல விருதுகள்!
Local
23 August 2026
முதல் நாளில் 300 ஓட்டங்களை குவித்தது இந்தியா - 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியது இலங்கை
Local
23 August 2026
முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த பரிசீலனை!
Local
23 August 2026
இலங்கை சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!
Local
23 August 2026
மட்டக்களப்பில் உந்துருளி விபத்து: இரு மாணவர்கள் பலி - மேலும் 5 பேர் காயம்!
Local
23 August 2026