General22 August 2026

லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் கல்விப் புலமைப்பரிசில் திட்டம்!

குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனை முகவர்களின் பிள்ளைகளுக்காக 2026 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படவுள்ள கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாளை (23) பிற்பகல் 2 மணிக்கு அநுராதபுரம் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

லொத்தர் விற்பனை மூலம் ஜனாதிபதி நிதியத்துக்கு கிடைக்கும் நிதிப் பங்களிப்பைப் பாராட்டி, லொத்தர் விற்பனை முகவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில், தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்காக இந்த புலமைப்பரிசில் திட்டம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes