போர்ட் சிட்டி எனப்படும் துறைமுக திட்டம் பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளோ அல்லது அபிவிருத்தியோ ஏற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டிலுள்ள சாதாரண குடிமகன் ஒருவர் விவசாயம் அல்லது தொழில்முயற்சிக்காக அரசாங்கத்திடம் காணியைக் குத்தகைக்கு பெற்று, 10-15 வருடங்களாக உறுதியளிக்கப்பட்ட திட்டங்களை முன்னெடுக்காவிட்டால் அந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படும்.
ஆனால், போர்ட் சிட்டி திட்டத்தில் பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளோ அல்லது அபிவிருத்தியோ ஏற்படவில்லை என தெரிவித்தார்.
ஆனால், போர்ட் சிட்டி திட்டத்தில் பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளோ அல்லது அபிவிருத்தியோ ஏற்படவில்லை என தெரிவித்தார்.
போர்ட் சிட்டி திட்டம் மூலமாக 80,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும், 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் ஈர்க்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் நாட்டின் இளைஞர்கள் மற்றும் தொழில்வல்லுநர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலை தொடர்கிறது.
போர்ட் சிட்டி ஆணைக்குழுவில் உள்ள சில அதிகாரிகளுக்கு மாதத்திற்கு 10 லட்சம் முதல் 14 லட்சம் ரூபாய் வரை அதிகளவிலான வேதனம் வழங்கப்படுகிறது.
அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச வேதன அளவிற்குக்கூட போர்ட் சிட்டி திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்குப் போதிய வருமானம் கிடைக்கப்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றச்சாட்டியுள்ளார்.
Latest News
இலங்கையின் தில்ஹானி மற்றும் ஷானிகா பதக்கங்களை வென்று சாதனை!
Local
22 August 2026
வடக்கு – கிழக்கில் இணைந்த சுயாட்சி தீர்வு அவசியம்: ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தல்!
Local
22 August 2026
நீதி அமைச்சர் கருத்து நீதித்துறை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் - தினன தகுண கண்டனம்!
Local
22 August 2026
வடக்கு - கிழக்கில் மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரி பிரதமரிடம் மனு கையளிப்பு!
Local
22 August 2026
மைதானத்தில் ஸ்டார்கை நேர்காணல் செய்த மனைவி!
Local
22 August 2026
விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமர் தலைமையில் நிதியுதவி வழங்கிவைப்பு
Local
22 August 2026
பங்களாதேஷ் - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : முதல் நாளில் 18 விக்கெட்டுகள் வீழ்ந்து பரபரப்பு!
Local
22 August 2026
காவல்துறை தடையகற்றல் சான்றிதழ் பெறுகின்ற இணையவழி சேவை மீண்டும் வழமைக்கு!
Local
22 August 2026
குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு: சோகத்தில் முடிந்த மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கை
Local
22 August 2026
வங்கிக் கடனை செலுத்தாதவர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்த வேண்டும் – சாணக்கியன்
Local
22 August 2026