அரச வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் கடன்களைப் பெற்று, அவற்றை மீளச் செலுத்தாத நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை அரசாங்கம் உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
சூரியனின் ‘விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பலர் அரச வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் கடன்களைப் பெற்று, அவற்றை மீளச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதாக சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்களின் பணத்தைப் பயன்படுத்தி, அவர்கள் வெளியில் வட்டிக்கு பணம் வழங்கும் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, கடன்களை மீளச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களின் முழுமையான பட்டியலை கோப் குழு உடனடியாகப் பெற்று, அதனைப் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இவ்வாறான நிதி முறைகேடுகளைத் தடுப்பதற்கு கோப் குழு தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் பேசப்பட்ட பில்லியன் கணக்கான உகண்டா பணப்பரிமாற்றங்கள், லம்போகினி சொகுசு வாகனங்கள் மற்றும் தங்கக் குதிரைகள் தொடர்பான பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும் உரிய விசாரணைகள் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விசாரணைகள் வெறுமனே அரசியல் பிரசாரமாக மட்டுமே நின்றுவிட்டனவா அல்லது அவை தொடர்பான உண்மை நிலவரம் என்ன என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
Latest News
8 வருட இரகசிய சேமிப்பு - ஒரே இரவில் எலியால் நேர்ந்த விபரீதம்
Local
23 August 2026
பங்களாதேஷை வீழ்த்தி ஒரு இன்னிங்சாலும் 51 ஓட்டங்களாலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி
Local
23 August 2026
ஐரோப்பிய பந்தயப் பயிற்சியில் நடிகர் அஜித்தின் சிற்றூந்து விபத்து - நடந்தது என்ன?
Local
23 August 2026
மொனராகலையில் 7 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கஞ்சா கைப்பற்றல் - சந்தேகநபர் கைது!
Local
23 August 2026
நாட்டின் சுற்றுலா வருமானம் வீழ்ச்சி - வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் கணிசமாக அதிகரிப்பு
Local
23 August 2026
22ஆவது திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் - இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்தல்!
Local
23 August 2026
இந்தியாவிலுள்ள இலங்கை ஏதிலிகள் தடையின்றி தாயகம் திரும்ப அனுமதி - ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு!
Local
23 August 2026
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!
Local
23 August 2026
"இவர்தான் மருத்துவர்!" - மணக்கோலத்தில் கேரள மணமகளின் மனிதம்!
Local
23 August 2026
ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை - நாமல் வலியுறுத்தல்
Local
23 August 2026