இலங்கையில் இணைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மீளப்பெற முடியாத வகையிலான சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
நிலையான அரசியல் தீர்வுக்கான '100 நாட்கள் செயல்முனைவின்' நான்காவது வருட அணிதிரளல் நிகழ்வு இன்று திருகோணமலையில் நடைபெற்றது.
திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், சிவில் சமூகப் பெண் பிரதிநிதிகள், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, அப்பகுதி மக்களின் அரசியல் உரிமைகள், சுயநிர்ணய உரிமை, நில உரிமை, மொழி உரிமை மற்றும் சமூகப் பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் நிரந்தரமான அரசியல் தீர்வொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு பல்வேறு தீர்வுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படாத நிலை தொடர்வதாக ஒருங்கிணைப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, எதிர்காலத்தில் மாற்ற முடியாத வகையிலும் சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட வகையிலும் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டு, அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி நிலையான அரசியல் தீர்வை உருவாக்க வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு மேலும் தெரிவித்துள்ளது.
நிலையான அரசியல் தீர்வுக்கான '100 நாட்கள் செயல்முனைவின்' நான்காவது வருட அணிதிரளல் நிகழ்வு இன்று திருகோணமலையில் நடைபெற்றது.
திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், சிவில் சமூகப் பெண் பிரதிநிதிகள், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, அப்பகுதி மக்களின் அரசியல் உரிமைகள், சுயநிர்ணய உரிமை, நில உரிமை, மொழி உரிமை மற்றும் சமூகப் பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் நிரந்தரமான அரசியல் தீர்வொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு பல்வேறு தீர்வுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படாத நிலை தொடர்வதாக ஒருங்கிணைப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, எதிர்காலத்தில் மாற்ற முடியாத வகையிலும் சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட வகையிலும் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டு, அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி நிலையான அரசியல் தீர்வை உருவாக்க வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு மேலும் தெரிவித்துள்ளது.
Latest News
ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை - நாமல் வலியுறுத்தல்
Local
23 August 2026
நாடெங்கும் அதிகரிக்கும் வெப்பநிலை - முதலிடத்தில் பொலன்னறுவை!
Local
23 August 2026
தென்னாப்பிரிக்காவில் சோகம்: குத்துச்சண்டை ஜாம்பவான் சொலானி டெடே துப்பாக்கி தாக்குதலில் உயிரிழப்பு!
Local
23 August 2026
மனிதர்களை மிஞ்சிய தொழில்நுட்பம்: உசைன் போல்டின் 100மீ ஓட்ட சாதனையை நொறுக்கிய சீன ரோபோ!
Local
23 August 2026
அமெரிக்காவிற்கு கனடா அதிரடி பதிலடி: செப்டம்பர் 8 முதல் டொலருக்கு டொலர் வரி அமுல்!
Local
23 August 2026
உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடமின்றி தவிக்கும் மக்கள் காஸாவில் தொடரும் மயான நெருக்கடி!
Local
23 August 2026
ஊதா நிற மின்னல்: விண்வெளியில் இருந்து நாசா வீரர் எடுத்த அபூர்வ புகைப்படம்!
Local
23 August 2026
பேருந்தை விற்றுப் பணம் கொடுத்த உரிமையாளர்: போலி விமானி சிக்கியது எப்படி?
Local
23 August 2026
டோக்கியோவில் குலுங்கிய உயரமான கட்டிடங்கள்: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு!
Local
23 August 2026
BTS ரசிகர்களுக்கு ஆச்சரியம்! 'நமஸ்தே இந்தியா' என வைரலாகும் விளம்பர காணொளி!
Local
23 August 2026