இலங்கையில் இணைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மீளப்பெற முடியாத வகையிலான சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
நிலையான அரசியல் தீர்வுக்கான '100 நாட்கள் செயல்முனைவின்' நான்காவது வருட அணிதிரளல் நிகழ்வு இன்று திருகோணமலையில் நடைபெற்றது.
திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், சிவில் சமூகப் பெண் பிரதிநிதிகள், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, அப்பகுதி மக்களின் அரசியல் உரிமைகள், சுயநிர்ணய உரிமை, நில உரிமை, மொழி உரிமை மற்றும் சமூகப் பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் நிரந்தரமான அரசியல் தீர்வொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு பல்வேறு தீர்வுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படாத நிலை தொடர்வதாக ஒருங்கிணைப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, எதிர்காலத்தில் மாற்ற முடியாத வகையிலும் சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட வகையிலும் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டு, அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி நிலையான அரசியல் தீர்வை உருவாக்க வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு மேலும் தெரிவித்துள்ளது.
நிலையான அரசியல் தீர்வுக்கான '100 நாட்கள் செயல்முனைவின்' நான்காவது வருட அணிதிரளல் நிகழ்வு இன்று திருகோணமலையில் நடைபெற்றது.
திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், சிவில் சமூகப் பெண் பிரதிநிதிகள், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, அப்பகுதி மக்களின் அரசியல் உரிமைகள், சுயநிர்ணய உரிமை, நில உரிமை, மொழி உரிமை மற்றும் சமூகப் பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் நிரந்தரமான அரசியல் தீர்வொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு பல்வேறு தீர்வுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படாத நிலை தொடர்வதாக ஒருங்கிணைப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, எதிர்காலத்தில் மாற்ற முடியாத வகையிலும் சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட வகையிலும் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டு, அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி நிலையான அரசியல் தீர்வை உருவாக்க வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு மேலும் தெரிவித்துள்ளது.
Latest News
அது நான் இல்லை இருந்தாலும் அதில் என்ன தவறு? - விஜய்யின் அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Local
24 August 2026
அமெரிக்காவில் தயாரிப்பு என விளம்பரம்: ட்ரம்ப் மொபைல் T1 ஸ்மார்ட்போனால் அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்!
Local
24 August 2026
உலகளவில் வெளியாகும் பிரம்மாண்ட ‘ராமாயணம்’ திரைப்படம் – 2,000 கோடி ரூபாய்க்கும் அதிக முதலீடு!
Local
24 August 2026
நீதிமன்றத்தை அவமதிப்பு: 6 பேருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தகவல் சமர்ப்பிப்பு
Local
24 August 2026
வெப்ப அலைகளின் தாக்கம் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்
Local
24 August 2026
அரசாங்கத்திற்கு எச்சரிக்கை: தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சல்லேவுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி தலைமையிலான அரசே முழுப் பொறுப்பு!
Local
24 August 2026
தனியார் துறை ஊழியர்களுக்கான இணையவழி தொடருந்து பருவச்சீட்டு முறைமை அறிமுகம்
Local
24 August 2026
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை: யாழ்ப்பாணத்தில் மூன்று வர்த்த நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்
Local
24 August 2026
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு புதிய மின்சார தொடருந்து திட்டம்: பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கம்
Local
24 August 2026
போலி மருத்துவர்கள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் அபராதம்
Local
24 August 2026