ஜனாதிபதி செயலாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்தி, அரசாங்கம் தனது ஊழல் எதிர்ப்பு மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
குளியாப்பிட்டியவில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமானாயக்க, இலங்கை சுங்கத் திணைக்களத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய காலப்பகுதியை மையப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ஊழலை ஒழிப்பதாகக் கூறும் ஜனாதிபதி, இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து தனது நேர்மையை நிரூபிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக அரசாங்கத்தைச் சாடிய அவர், நெல் கொள்முதல் விலை வீழ்ச்சி, அரிசி விலை உயர்வு, வரிச்சுமை, மின்சாரம் மற்றும் எரிபொருள் கட்டண உயர்வால் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அரச நிறுவனங்கள் சார்ந்த பாதுகாப்பு மற்றும் இணையக் குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், துறைமுகக் கொள்கலன் சம்பவங்களுக்கும் எதிர்க்கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அரசியல் மோதல்களைத் தவிர்த்து, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
குளியாப்பிட்டியவில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமானாயக்க, இலங்கை சுங்கத் திணைக்களத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய காலப்பகுதியை மையப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ஊழலை ஒழிப்பதாகக் கூறும் ஜனாதிபதி, இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து தனது நேர்மையை நிரூபிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக அரசாங்கத்தைச் சாடிய அவர், நெல் கொள்முதல் விலை வீழ்ச்சி, அரிசி விலை உயர்வு, வரிச்சுமை, மின்சாரம் மற்றும் எரிபொருள் கட்டண உயர்வால் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அரச நிறுவனங்கள் சார்ந்த பாதுகாப்பு மற்றும் இணையக் குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், துறைமுகக் கொள்கலன் சம்பவங்களுக்கும் எதிர்க்கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அரசியல் மோதல்களைத் தவிர்த்து, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
Latest News
தமிழக மக்களின் அரசியல் முடிவு சரியானது - முதலமைச்சர் விஜய் குறித்து நடிகர் யாஷ் புகழாரம்!
Local
25 August 2026
அம்பலாங்கொடவில் அதிரவைக்கும் சம்பவம்: விடுதியில் தங்கியிருந்த நபர் மர்மமான நிலையில் உடலமாக மீட்பு!
Local
25 August 2026
எல் நினோ தீவிரமடைந்தால் இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
Local
25 August 2026
திடீரென உருவான சூப்பர்செல் சூறாவளி: பிரான்ஸில் நிலவும் பதற்றமான சூழல்!
Local
25 August 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயது 40 ஆக அதிகரிக்கப்படுமா? – அரசாங்கம் தெளிவுபடுத்தல்!
Local
25 August 2026
கொழும்பில் இந்தியா - இலங்கை டெஸ்ட்: 3வது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தடுமாற்றம்!
Local
25 August 2026
விஜய் தீவிர அரசியலுக்கு வந்த பின் இது நடக்கலையே... : விஜய் – சங்கீதா திருமண நாளில் மீண்டும் கவனம்!
Local
25 August 2026
மத்திய கிழக்கு நிலைமை ஸ்திரமடையும் வரை QR எரிபொருள் விநியோக முறைமை தொடரும்!
Local
25 August 2026
கோடிகளில் புரண்டாலும் வெளிநாட்டில் காசாளராக வேலை பார்த்த ஜேசன் சஞ்சய் : வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவம்!
Local
25 August 2026
மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீவிரம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
25 August 2026