General23 August 2026

22ஆவது திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் - இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்தல்!

அரசியலமைப்பிற்காக முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தச் சட்டம், மக்களின் இறையாண்மைக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிவலியுறுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய சட்டமூலம், மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் இறையாண்மையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால், இதனை நாடாளுமன்றத்தில் மட்டும் நிறைவேற்றுவது போதுமானதல்ல என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, மக்களின் நேரடி ஒப்புதலைப் பெறுவதற்காக இந்தத் திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes