General23 August 2026

பொரளையில் வீடொன்றுக்கு முன்பாக கைக்குண்டு மீட்பு!

கொழும்பு, பொரளை - லெஸ்லி ரணகல மாவத்தையிலுள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக வீசிச் செல்லப்பட்டிருந்த வெடிக்கும் நிலையிலுள்ள கைக்குண்டு ஒன்றை பொரளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இன்று (23) காலை கண்டெடுக்கப்பட்ட இந்த கைக்குண்டு தொடர்பில் பொரளை காவல்துறையினர் மேலதிக தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes