General23 August 2026

இலங்கை சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கை சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபையின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் தலைவர் சுனில் ஜயரத்னவின் பதவி விலகலையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபையின் புதிய தலைவராக ரஞ்சித் ராஜசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் சிவில் வானூர்தி போக்குவரத்துத் துறை, விமானப் பாதுகாப்பு மற்றும் அதுசார்ந்த ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளைக் கண்காணித்து நிர்வகிக்கும் பொறுப்பை இலங்கை சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes