நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் ஆறு அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சஇ உதய கம்மன்பில, சுகீஸ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன மற்றும் மஹிந்த பத்திரண ஆகியோருக்கு எதிராகவே இந்த நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் தகவல்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் கீழ் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூலை 7 முதல் ஜூலை 15 வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்தின் போதுஇ இவர்கள் நீதிமன்ற நடைமுறைகளை விமர்சித்து பகிரங்கமாக கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆகஸ்ட் 5 ஆம் திகதி கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் தகவல்களைச் சமர்ப்பித்தது.
முன்வைக்கப்பட்ட தகவல்களை ஆராய்ந்த நீதவான் நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் முதற்கட்ட அவதானிப்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டது.
அதற்கமைய குறித்த நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக வழக்கை பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.
Latest News
விஜய்யின் அம்மா ஷோபாவிற்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு
Local
25 August 2026
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : இலங்கையில் சட்டென குறைந்த தங்க விலை!
Local
25 August 2026
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியது
Local
25 August 2026
கேரளாவில் 100 மீட்டர் தொலைவில் சிறுத்தை – விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் ஆபத்தான பயணம்!
Local
25 August 2026
அதிவேகப் பேருந்து நடத்துனர் உட்பட 9 பேர் போதைப்பொருளுடன் சிக்கினர்: மாகும்பரவில் அதிரடி சோதனை!
Local
25 August 2026
எம்.எஸ்.தோனி, மார்க் பவுச்சரின் சாதனைகளை முறியடித்தார் ரிஷப் பண்ட் !
Local
25 August 2026
தமிழக வெற்றிக்கழக அமைச்சர் மீது நில ஆக்கிரமிப்பு முறைப்பாடு: அரசியலில் பெரும் புயல்!
Local
25 August 2026
தேவ்தத் படிக்கலின் தொடர் சதங்கள்: கம்பீரின் முடிவுகளுக்கு ஸ்ரீகாந்த் கடும் எச்சரிக்கை!
Local
25 August 2026
"பஸ் லலித்" மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் ஒப்படைப்பு!
Local
25 August 2026
இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர் இறுதிச்சடங்கிற்கு உயிருடன் வந்ததால் அதிர்ச்சி ! கல்கமுவவில் பரபரப்பு
Local
25 August 2026