General24 August 2026

வானில் மீண்டும் ஒரு அதிசய நிகழ்வு : இரத்தம் போல் சிவக்கப்போகும் நிலவு - அறிவியல் காரணம் என்ன?

"இரத்த நிலவு" (Blood Moon) என அழைக்கப்படும் பகுதி சந்திர கிரகணம் எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதி நிகழவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திர கிரகணத்தின்போது, பூமியின் நிழல் சந்திரனின் ஒரு பகுதியை மறைக்கும். இதன்போது, சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் ஊடாகச் சென்று சந்திரனில் படுவதால், சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.

எனினும், இந்த சந்திர கிரகணம் காலை 8.04 மணியளவில் ஆரம்பிக்கவுள்ளதால், இந்தியாவிலிருந்து இதனைக் காண முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இரத்த நிலவு" என அழைக்கப்படும் இத்தகைய நிகழ்வுகள், சந்திர கிரகணத்தின் போது சந்திரன் சிவப்பு அல்லது செம்மஞ்சள் நிறத்தில் தோன்றுவதால் அந்தப் பெயரில் அழைக்கப்படுகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes