அநுராதபுரம், கல்னேவ - கலேவெவ வீதிப் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்து இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குழந்தையைக் காணவில்லை என அதன் தந்தை நேற்று (23) கல்னேவ காவல்துறையில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், அந்தப் பகுதி மக்களுடன் இணைந்து காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது, வீட்டின் அருகில் கால்வாயொன்றின் பாலத்தின் அடியில் குழந்தை சிக்குண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் உடனடியாகக் கல்னேவ மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டபோதிலும், அது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த குழந்தை கல்னேவ பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், உடற்கூறாய்வு பரிசோதனைகளுக்காக உடலம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து கல்னேவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குழந்தையைக் காணவில்லை என அதன் தந்தை நேற்று (23) கல்னேவ காவல்துறையில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், அந்தப் பகுதி மக்களுடன் இணைந்து காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது, வீட்டின் அருகில் கால்வாயொன்றின் பாலத்தின் அடியில் குழந்தை சிக்குண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் உடனடியாகக் கல்னேவ மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டபோதிலும், அது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த குழந்தை கல்னேவ பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், உடற்கூறாய்வு பரிசோதனைகளுக்காக உடலம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து கல்னேவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி: follow on பெற்றது இலங்கை அணி
Local
26 August 2026
பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து : 15 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு
Local
26 August 2026
"கலாசாரம் ஆடையில் இல்லை, உணர்வில் உள்ளது.." - கங்கனாவின் விமர்சனத்துக்கு கிருத்தி சனோன் பதில்
Local
26 August 2026
தரம் குறைந்த உரம் இறக்குமதி ஊழல் வழக்கு: டிசம்பர் 4ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Local
26 August 2026
கெஹல்பத்தர பத்மேவின் கைப்பேசிகள் மூலம் வெளிவந்த முக்கியத் தகவல்கள்: குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கை
Local
26 August 2026
காதலின் வெளிப்பாடா அல்லது சட்ட மீறலா? சிற்றூந்தில் 3,400 முத்தக் குறியீடுகளைப் பதித்த இளம் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!
Local
26 August 2026
டொக்சிக் படக்குழுவின் அதிரடி வேண்டுகோள்: இரசிகர்கள் செய்யக்கூடாதவை என்ன?
Local
26 August 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெளியேறும் மற்றும் நுழைவுப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
Local
26 August 2026
அம்பலாங்கொட காவல்துறையினரால் பொதுமகன் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்
Local
26 August 2026
இன்று பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Local
26 August 2026