வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் அவர்கள் சட்டவிரோதமான முறையில் ஈட்டிய சொத்துக்களை அரசுடைமையாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்த, காவல்துறை பேச்சாளர் எஃப்.யு.வுட்லர், இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட பஸ் லலித் என்பவரும் பாரிய போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்பதால் அவரின் சொத்துகள் தொடர்பில் முன்னதாக, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனிடையே, கடந்த 2024 ஆம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட 1,549 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம், ஆபரணங்கள், பணம், வாகனங்கள், சொகுசு வீடுகள் மற்றும் காணிகள் போன்ற சட்டவிரோத சொத்துக்களை அரசுடைமையாக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டிலும் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், 2026 ஆம் ஆண்டின் கடந்த சில மாதங்களில் 839 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வாயிலாக மொத்தம் 3,878 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடைமையாக்கத் தேவையான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்குப் பின்னர் அவை முழுமையாக அரசுடைமையாக்கப்படவுள்ளன.
இதனிடையே, கடந்த 2025 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நாடளாவிய விசேட நடவடிக்கையின்கீழ் சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் எவரேனும் சட்டவிரோதச் செயல்கள் குறித்த தகவல்களை வழங்க விரும்பினால், 1818 என்ற பிரத்தியேகத் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம். பெறப்படும் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாகக் கையாளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் காவல்துறை உறுதியளித்துள்ளது.
எவரும் சட்டவிரோத வழிகளில் தமது சொகுசு வாழ்க்கைக்காக எத்தகைய சொத்துக்களையும் அனுபவிக்க முடியாது எனவும், வெளிநாடுகளில் தப்பியோடி வாழும் அனைத்து சந்தேகநபர்களையும் குற்றவாளிகளையும் தொடர்ந்தும் நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான அனைத்துத் திட்டங்களும் உறுதியாகச் செயற்படுத்தப்படும் எனவும் காவல்துறை பேச்சாளர் எஃப்.யூ.வுட்லர் தெரிவித்தார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்த, காவல்துறை பேச்சாளர் எஃப்.யு.வுட்லர், இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட பஸ் லலித் என்பவரும் பாரிய போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்பதால் அவரின் சொத்துகள் தொடர்பில் முன்னதாக, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனிடையே, கடந்த 2024 ஆம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட 1,549 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம், ஆபரணங்கள், பணம், வாகனங்கள், சொகுசு வீடுகள் மற்றும் காணிகள் போன்ற சட்டவிரோத சொத்துக்களை அரசுடைமையாக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டிலும் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், 2026 ஆம் ஆண்டின் கடந்த சில மாதங்களில் 839 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வாயிலாக மொத்தம் 3,878 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடைமையாக்கத் தேவையான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்குப் பின்னர் அவை முழுமையாக அரசுடைமையாக்கப்படவுள்ளன.
இதனிடையே, கடந்த 2025 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நாடளாவிய விசேட நடவடிக்கையின்கீழ் சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் எவரேனும் சட்டவிரோதச் செயல்கள் குறித்த தகவல்களை வழங்க விரும்பினால், 1818 என்ற பிரத்தியேகத் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம். பெறப்படும் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாகக் கையாளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் காவல்துறை உறுதியளித்துள்ளது.
எவரும் சட்டவிரோத வழிகளில் தமது சொகுசு வாழ்க்கைக்காக எத்தகைய சொத்துக்களையும் அனுபவிக்க முடியாது எனவும், வெளிநாடுகளில் தப்பியோடி வாழும் அனைத்து சந்தேகநபர்களையும் குற்றவாளிகளையும் தொடர்ந்தும் நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான அனைத்துத் திட்டங்களும் உறுதியாகச் செயற்படுத்தப்படும் எனவும் காவல்துறை பேச்சாளர் எஃப்.யூ.வுட்லர் தெரிவித்தார்.
Latest News
பங்களாதேஷுக்கு எதிரான மாபெரும் சாதனை: பும்ராவை பின்னுக்குத் தள்ளிய ஸ்டார்க்
Local
26 August 2026
"உங்களிடம் நடிப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும் - சிறுமி நக்ஷத்ராவின் நடிப்பை வியந்து பாராட்டிய நடிகர் தனுஷ்!
Local
26 August 2026
தியாகி பொன் சிவகுமாரனின் 76 ஆவது பிறந்தநாள் நினைவு தினம் அனுசரிப்பு!
Local
26 August 2026
சிறைச்சாலை விடுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட கைதி உந்துருளியுடன் தப்பியோட்டம்
Local
26 August 2026
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 384 பயணிகள் மாயம்!
Local
26 August 2026
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: இலங்கை அணி தொடர்ந்தும் தடுமாற்றம்
Local
26 August 2026
செப்டம்பர் 14 முதல் யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2 ஆம் வலயங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்படும்
Local
26 August 2026
கடந்த 24 மணி நேரத்தில் சோகம்: வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு!
Local
26 August 2026
3 பிள்ளைகளுக்கு அப்பாவான பின் திடீர் திருமணம் : தடகள உலகை அதிரவிட்ட உசைன் போல்ட்டின் காதலுக்கு கிடைக்கும் மகுடம்!
Local
26 August 2026
அரசாங்கம் எத்தகைய சமரசத்திற்கும் இடமளிக்காது - ஆனந்த விஜேபால
Local
26 August 2026