இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தடுமாற்றத்தை சந்திதுள்ளது.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 9 விக்கெட்டுகளுக்கு 503 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.
தேவ்தட் படிக்கல் 117 ஓட்டங்களையும், துருவ் ஜூரல் 115 ஓட்டங்களையும் பெற்று சதம் அடித்தனர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
சோனல் தினுஷா 103 ஓட்டங்களையும், பசிந்து சூரியபண்டார 80 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதன் மூலம் இந்திய அணி 213 ஓட்டங்கள் முன்னிலை பெற்றதால், இலங்கை அணி follow-on முறையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது.
இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.
இதன்படி, இலங்கை அணி இந்திய அணியை விட 16 ஓட்டங்கள் மாத்திரமே முன்னிலையில் உள்ளது.
பசிந்து சூரியபண்டார 92 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக 115 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.
இந்திய அணி சார்பில் மானவ் சுதார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதனிடையே, இன்னும் 4 விக்கெட்டுகள் மாத்திரமே இலங்கை அணியிடம் இருக்கும் நிலையில், நாளைய இறுதி நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 9 விக்கெட்டுகளுக்கு 503 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.
தேவ்தட் படிக்கல் 117 ஓட்டங்களையும், துருவ் ஜூரல் 115 ஓட்டங்களையும் பெற்று சதம் அடித்தனர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
சோனல் தினுஷா 103 ஓட்டங்களையும், பசிந்து சூரியபண்டார 80 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதன் மூலம் இந்திய அணி 213 ஓட்டங்கள் முன்னிலை பெற்றதால், இலங்கை அணி follow-on முறையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது.
இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.
இதன்படி, இலங்கை அணி இந்திய அணியை விட 16 ஓட்டங்கள் மாத்திரமே முன்னிலையில் உள்ளது.
பசிந்து சூரியபண்டார 92 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக 115 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.
இந்திய அணி சார்பில் மானவ் சுதார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதனிடையே, இன்னும் 4 விக்கெட்டுகள் மாத்திரமே இலங்கை அணியிடம் இருக்கும் நிலையில், நாளைய இறுதி நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Latest News
ஃபிஃபா தலைவருக்கு எதிராக சுவிட்ஸர்லாந்தில் வழக்கு -தயாராகும் ஆவணங்கள்!
Local
28 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது தாக்குதல்
Local
28 August 2026
ஆயுள் தண்டனை பெற்றிருந்த பொஸ்னிய படையதிகாரி சிறைக்குள் மரணம்!
Local
28 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்ற ஈரான் - கட்டார் கூட்டுத் திட்டம்: தெஹ்ரானில் முக்கிய பேச்சுவார்த்தை!
Local
28 August 2026
நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கையிடமிருந்து நிவாரணப் பணிகளுக்காக 1 மில்லியன் டொலர் நிதியுதவி!
Local
27 August 2026
மாத்தறையில் தம்பதியர் கைது: ரூ. 70 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்!
Local
27 August 2026
குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பு விளக்கம்!
Local
27 August 2026
சுவிங்கம் பிரியரா நீங்கள் ? சைலிட்டால் இனிப்பூட்டி ஆபத்தானது தெரியுமா? இதயத்தைப் பதம் பார்க்கும் அதிர்ச்சித் தகவல்!
Local
27 August 2026
25 வருடங்களுக்கு பின்னர் பிரையன் லாராவின் சாதனையை முறியடித்த சொனால் தினுஷ
Local
27 August 2026
தமிழக சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்! திமுக – தவெக உறுப்பினர்களிடையே கடும் கருத்து மோதல்
Local
27 August 2026