இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தடுமாற்றத்தை சந்திதுள்ளது.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 9 விக்கெட்டுகளுக்கு 503 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.
தேவ்தட் படிக்கல் 117 ஓட்டங்களையும், துருவ் ஜூரல் 115 ஓட்டங்களையும் பெற்று சதம் அடித்தனர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
சோனல் தினுஷா 103 ஓட்டங்களையும், பசிந்து சூரியபண்டார 80 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதன் மூலம் இந்திய அணி 213 ஓட்டங்கள் முன்னிலை பெற்றதால், இலங்கை அணி follow-on முறையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது.
இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.
இதன்படி, இலங்கை அணி இந்திய அணியை விட 16 ஓட்டங்கள் மாத்திரமே முன்னிலையில் உள்ளது.
பசிந்து சூரியபண்டார 92 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக 115 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.
இந்திய அணி சார்பில் மானவ் சுதார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதனிடையே, இன்னும் 4 விக்கெட்டுகள் மாத்திரமே இலங்கை அணியிடம் இருக்கும் நிலையில், நாளைய இறுதி நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 9 விக்கெட்டுகளுக்கு 503 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.
தேவ்தட் படிக்கல் 117 ஓட்டங்களையும், துருவ் ஜூரல் 115 ஓட்டங்களையும் பெற்று சதம் அடித்தனர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
சோனல் தினுஷா 103 ஓட்டங்களையும், பசிந்து சூரியபண்டார 80 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதன் மூலம் இந்திய அணி 213 ஓட்டங்கள் முன்னிலை பெற்றதால், இலங்கை அணி follow-on முறையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது.
இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.
இதன்படி, இலங்கை அணி இந்திய அணியை விட 16 ஓட்டங்கள் மாத்திரமே முன்னிலையில் உள்ளது.
பசிந்து சூரியபண்டார 92 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக 115 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.
இந்திய அணி சார்பில் மானவ் சுதார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதனிடையே, இன்னும் 4 விக்கெட்டுகள் மாத்திரமே இலங்கை அணியிடம் இருக்கும் நிலையில், நாளைய இறுதி நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Latest News
குத்துச்சண்டை போட்டாலும் , தொழிற்சாலை பணிகளில் சோம்பேறிகளான சீன ரோபோக்கள்
Local
28 August 2026
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் (89) உடல்நலக்குறைவு- கவலைக்கிடமான நிலை
Local
28 August 2026
அமெரிக்க மத்திய உளவுத்தலைவரின் ரஷ்ய பயணத்தின் இரகசியம் வெளியானது?
Local
28 August 2026
பெர்லின் மரதனில் இருந்து விலகிக்கொண்ட சாதனை வீரர்!
Local
28 August 2026
இங்கிலாந்து வீரர் கார்ஸ் தொடர்பில் காவல்துறை விசாரணை !
Local
28 August 2026
ஈட்டி எறிதல் போட்டியில் உலகை வென்ற இலங்கை வீரர் !
Local
28 August 2026
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : முதல் நாளில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அபாரம்!
Local
28 August 2026
வேரறுக்கப்பட்ட பாரம்பரியம்: மேற்கு கரையில் ஒலிவ் மரங்களை அழித்த இஸ்ரேலிய குடியேறிகள்!
Local
28 August 2026
ஃபிஃபா தலைவருக்கு எதிராக சுவிட்ஸர்லாந்தில் வழக்கு -தயாராகும் ஆவணங்கள்!
Local
28 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது தாக்குதல்
Local
28 August 2026