இலங்கை அரசாங்கத்தால் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு உரிம ஏலத்தை சர்வதேச முப்பரிமாண சந்தைக்குக் கொண்டு செல்வதற்காகப் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட 'ஃபிரன்டியர் எனர்ஜி நெட்வொர்க்' நிறுவனம் களமிறங்கியுள்ளது.
மன்னார் படுகையில் வழங்கப்பட்டுள்ள நான்கு கடல்சார் ஆய்வுத் தொகுதிகளில் முதலீடு செய்யக்கூடிய உலகளாவிய நிறுவனங்களை இணைப்பதற்கான பிரத்தியேக பிரசாரத்தை இந்த நிறுவனம் முன்னெடுக்கவுள்ளது.
'ஸ்ரீ லங்கா உரிம ஏலம் 2026' ஆரம்ப நிகழ்வில் நேற்றுமுன்தினம் காணொளி ஊடாகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஃபிரன்டியர் நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரதம அதிகாரியுமான கெய்ல் மீக்கிள், தங்களது உலகளாவிய முதலீட்டு ஊக்குவிப்புத் தளமான 'பெட்ரோ இன்வெஸ்ட்' ஊடாக இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இந்த வாய்ப்பை சர்வதேச சந்தைக்குக் கொண்டு செல்லவுள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கையானது மன்னார் படுகையில் கிட்டத்தட்ட 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட நான்கு கடல்சார் ஆய்வுத் தொகுதிகளை சர்வதேச எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.
ஏல வாய்ப்புகளை சர்வதேச முதலீட்டாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில், எதிர்வரும் செப்டம்பர் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் லண்டனில் நடைபெறும் உலக எரிசக்தி உச்சி மாநாட்டிலும், அக்டோபர் 21 ஆம் திகதி பிரத்தியேக இணையவழி முதலீட்டாளர் விளக்கக் கூட்டத்திலும், நவம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசிய பெட்ரோலிய புவியியல் மாநாட்டிலும் இந்த நிறுவனம் விளம்பர நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.
ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் ஏல விபரங்களை எளிதில் அறிந்துகொள்ள வசதியாகப் பிரத்தியேக டிஜிட்டல் தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் நிலப்பரப்பு வரைபடங்கள் மற்றும் அதிகாரிகளின் விபரங்களை அணுக முடியும்.
கடந்த 2011 ஆம் ஆண்டில் இந்திய நிறுவனம் ஒன்றினால் மன்னார் படுகையில் கண்டறியப்பட்ட 'டொராடோ' மற்றும் 'பரக்குடா' ஆகிய எரிவாயு கிணறுகளில் சுமார் 839 பில்லியன் கன அடி இணைக்கப்பட்ட வள மதிப்பீடு உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஏலத்திற்கான விண்ணப்பங்கள் 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையவுள்ளதுடன், வணிக ரீதியான சாத்தியக்கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டால் 2032 ஆம் ஆண்டிற்குள் வணிக ரீதியான உற்பத்தியைத் தொடங்குவதை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபை இலக்காக நிர்ணயித்துள்ளது.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிகள் மற்றும் மேம்பட்ட ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி வசதிகள் காரணமாக, ஒரு தசாப்தத்திற்கு முன்னர் காணப்பட்ட சவால்கள் குறைந்துள்ளதாகவும், இலங்கையின் இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுத் திட்டங்கள் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் படுகையில் வழங்கப்பட்டுள்ள நான்கு கடல்சார் ஆய்வுத் தொகுதிகளில் முதலீடு செய்யக்கூடிய உலகளாவிய நிறுவனங்களை இணைப்பதற்கான பிரத்தியேக பிரசாரத்தை இந்த நிறுவனம் முன்னெடுக்கவுள்ளது.
'ஸ்ரீ லங்கா உரிம ஏலம் 2026' ஆரம்ப நிகழ்வில் நேற்றுமுன்தினம் காணொளி ஊடாகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஃபிரன்டியர் நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரதம அதிகாரியுமான கெய்ல் மீக்கிள், தங்களது உலகளாவிய முதலீட்டு ஊக்குவிப்புத் தளமான 'பெட்ரோ இன்வெஸ்ட்' ஊடாக இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இந்த வாய்ப்பை சர்வதேச சந்தைக்குக் கொண்டு செல்லவுள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கையானது மன்னார் படுகையில் கிட்டத்தட்ட 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட நான்கு கடல்சார் ஆய்வுத் தொகுதிகளை சர்வதேச எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.
ஏல வாய்ப்புகளை சர்வதேச முதலீட்டாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில், எதிர்வரும் செப்டம்பர் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் லண்டனில் நடைபெறும் உலக எரிசக்தி உச்சி மாநாட்டிலும், அக்டோபர் 21 ஆம் திகதி பிரத்தியேக இணையவழி முதலீட்டாளர் விளக்கக் கூட்டத்திலும், நவம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசிய பெட்ரோலிய புவியியல் மாநாட்டிலும் இந்த நிறுவனம் விளம்பர நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.
ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் ஏல விபரங்களை எளிதில் அறிந்துகொள்ள வசதியாகப் பிரத்தியேக டிஜிட்டல் தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் நிலப்பரப்பு வரைபடங்கள் மற்றும் அதிகாரிகளின் விபரங்களை அணுக முடியும்.
கடந்த 2011 ஆம் ஆண்டில் இந்திய நிறுவனம் ஒன்றினால் மன்னார் படுகையில் கண்டறியப்பட்ட 'டொராடோ' மற்றும் 'பரக்குடா' ஆகிய எரிவாயு கிணறுகளில் சுமார் 839 பில்லியன் கன அடி இணைக்கப்பட்ட வள மதிப்பீடு உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஏலத்திற்கான விண்ணப்பங்கள் 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையவுள்ளதுடன், வணிக ரீதியான சாத்தியக்கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டால் 2032 ஆம் ஆண்டிற்குள் வணிக ரீதியான உற்பத்தியைத் தொடங்குவதை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபை இலக்காக நிர்ணயித்துள்ளது.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிகள் மற்றும் மேம்பட்ட ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி வசதிகள் காரணமாக, ஒரு தசாப்தத்திற்கு முன்னர் காணப்பட்ட சவால்கள் குறைந்துள்ளதாகவும், இலங்கையின் இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுத் திட்டங்கள் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
2029இல் பிரதமர் வேட்பாளர் விஜய்? காங்கிரஸ் ஆதரவை விலக்கிக்கொள்ளுமா? தமிழக அரசியலில் பரபரப்பு
Local
29 August 2026
பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
Local
29 August 2026
கொழும்பு துறைமுகத்தின் பாரிய வளர்ச்சி
Local
29 August 2026
ஒன்றாக சாப்பிடுங்கள்-மனச்சோர்வை விரட்டுங்கள்- ஆய்வுகளில் வெளியான முக்கிய தகவல்
Local
29 August 2026
நேபாளத்தில் காணாமல் போனோரின் எண்ணிக்கை 2ஆயிரத்தை நெருங்குகிறது
Local
29 August 2026
நியூயோர்க்கில் ஆர்எஸ்எஸின் தலைவர் தலைவர் மோகன் பகவத் நடத்தும் நிகழ்வு- எதிர்ப்பும் ஆதரவும்
Local
29 August 2026
அமெரிக்காவில் பகிரங்க டென்னிஸ் போட்டிகள் ஆரம்பம்
Local
29 August 2026
அமெரிக்காவுடன் வர்த்தகப்போர்- கனடாவே அதிகம் பாதிக்கப்படும்
Local
29 August 2026
காஸாவில் அமைதியை வழிகாட்டலை மீறினால், போர்நிறுத்தம் முற்றிலுமாகச் சிதைந்துவிடும் என்று எச்சரிக்கை
Local
29 August 2026
ட்ரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
Local
29 August 2026