General27 August 2026

இந்தியா – இலங்கை 2ஆவது டெஸ்ட் சமனிலையில் முடிவு – தொடரை 1-0 எனக் கைப்பற்றியது இந்தியா

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (27) சமனிலையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இரண்டாவது போட்டியின் இறுதி நாளில் இலங்கை அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 9 விக்கெட்களை இழந்து 429 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்துவதாக அறிவித்தது.

இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியின் பின்வரிசை வீரர்களுடன் இணைந்து சொனால் தினுஷ போராட்டமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதில் 264 பந்துகளை எதிர்கொண்ட சொனால் தினுஷ, 8 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களைப் பெற்றார்.

முன்னதாக, நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 503 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால், 213 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் ஃபாலோ-ஆன் பெற்ற இலங்கை அணி, 2 ஆவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 9 விக்கெட்டுகளை இழந்து 429 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

சொனால் தினுஷவுடன் இணைந்து பசிந்து சூரியபண்டார 92 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 55 ஓட்டங்களையும், கேசர நுவந்த 46 ஓட்டங்களையும் பெற்று, இலங்கை அணியின் போராட்டத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர்.

இதன் மூலம் 2 ஆவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவடைந்தது.

எனினும், முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியுள்ளது.

எனினும், முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes