கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (27) சமனிலையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இரண்டாவது போட்டியின் இறுதி நாளில் இலங்கை அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 9 விக்கெட்களை இழந்து 429 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்துவதாக அறிவித்தது.
இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியின் பின்வரிசை வீரர்களுடன் இணைந்து சொனால் தினுஷ போராட்டமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதில் 264 பந்துகளை எதிர்கொண்ட சொனால் தினுஷ, 8 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களைப் பெற்றார்.
முன்னதாக, நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 503 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால், 213 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் ஃபாலோ-ஆன் பெற்ற இலங்கை அணி, 2 ஆவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 9 விக்கெட்டுகளை இழந்து 429 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
சொனால் தினுஷவுடன் இணைந்து பசிந்து சூரியபண்டார 92 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 55 ஓட்டங்களையும், கேசர நுவந்த 46 ஓட்டங்களையும் பெற்று, இலங்கை அணியின் போராட்டத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர்.
இதன் மூலம் 2 ஆவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவடைந்தது.
எனினும், முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியுள்ளது.
இரண்டாவது போட்டியின் இறுதி நாளில் இலங்கை அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 9 விக்கெட்களை இழந்து 429 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்துவதாக அறிவித்தது.
இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியின் பின்வரிசை வீரர்களுடன் இணைந்து சொனால் தினுஷ போராட்டமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதில் 264 பந்துகளை எதிர்கொண்ட சொனால் தினுஷ, 8 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களைப் பெற்றார்.
முன்னதாக, நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 503 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால், 213 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் ஃபாலோ-ஆன் பெற்ற இலங்கை அணி, 2 ஆவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 9 விக்கெட்டுகளை இழந்து 429 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
சொனால் தினுஷவுடன் இணைந்து பசிந்து சூரியபண்டார 92 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 55 ஓட்டங்களையும், கேசர நுவந்த 46 ஓட்டங்களையும் பெற்று, இலங்கை அணியின் போராட்டத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர்.
இதன் மூலம் 2 ஆவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவடைந்தது.
எனினும், முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியுள்ளது.
எனினும், முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியுள்ளது.
Latest News
இரவோடு இரவாக வெடித்துச் சிதறிய ஆயுதக் கிடங்கு! 37 பேர் உடலங்கள் மீட்பு; 50 வீடுகள் தரைமட்டம்!
Local
29 August 2026
திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினரான வெல்லே சாரங்க எனப்படும் சாரங்க பிரதீப் துபாயில் கைது
Local
29 August 2026
“பங்கேற்க மாட்டோம்” - இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அதிரடி முடிவு!
Local
29 August 2026
62 ஆவது பிறந்தநாளில் 62 புடவைகளைப் பரிசளித்து நடிகை நளினியை நெகிழ வைத்த சகோதரன்!
Local
29 August 2026
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் தமிழ் முன்னோட்டம் வெளியானது!
Local
29 August 2026
மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பைக் குறைத்தது தமிழக அரசு!
Local
29 August 2026
கீழ் மல்வத்து ஓயா திட்டப் பணிகளை விரைவுபடுத்த பணிப்புரை!
Local
29 August 2026
இலவச சுகாதார சேவையை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசியல் சதி: GMOA எச்சரிக்கை!
Local
29 August 2026
கடத்தப்பட்ட பெண்ணுடன் தப்ப முயன்ற சிற்றூந்து மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு!
Local
29 August 2026
நேபாள வெள்ளப்பெருக்கு: வெள்ளத்திற்கு இடையே உறுதியாக நின்ற பச்சை நிற வீடு !
Local
29 August 2026