தமிழக சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் சிற்றூந்து வழங்குவது தொடர்பான விவாதத்தின்போது, தி.மு.க. ஆட்சியில் நடத்தப்பட்ட சிற்றூந்து பந்தயம் தொடர்பாக ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிற்றூந்துகள் வழங்குவதால் என்ன பயன் என தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், தொகுதிகளுக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளை ஆய்வு செய்து பணியாற்றுவதற்காகவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிற்றூந்துகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய உதயநிதி, அரச கஜானாவில் பணம் இல்லை என கூறப்படும் நிலையில், சிற்றூந்துகள் வாங்குவதற்கான நிதி எவ்வாறு கிடைக்கிறது எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், தி.மு.க. ஆட்சியில் சிற்றூந்து பந்தயம் நடத்துவதற்காக ரூ.24 கோடி செலவிடப்பட்டதாகக் குறிப்பிட்டதுடன், “அந்தப் பணம் யாருடையது? அது உங்கள் வீட்டுப் பணமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் அமைச்சர் நேரு, உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது சர்வதேச தரத்தில் சிற்றூந்து பந்தயம் நடத்தப்பட்டதாகவும், அதற்கு பலரும் பாராட்டு தெரிவித்ததாகவும் கூறினார்.
மேலும், செங்கோட்டையன் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் பதக்கங்களுக்காக ரூ.10 கோடி செலவிடப்பட்டதாகவும் நேரு பதிலடி கொடுத்தார்.
தொடர்ந்து அமைச்சர் அருண்ராஜ், தி.மு.க. ஆட்சியில் நிதி நெருக்கடி இருப்பதாகக் கூறியபோதும், கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்தது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதனால் சட்டசபையில் ஆளும் தரப்பினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Latest News
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம்: 675 உடலங்கள் மீட்பு; 2,400க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை
Local
30 August 2026
விஜய்க்கு த்ரிஷாவின் ரக்க்ஷா பந்தன் வாழ்த்து : "இத்தனை நாள் பேசியவர்களுக்கு இதுவே பதில்..." - வைரல் பதிவும் அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மையும்!
Local
30 August 2026
வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்பு திரும்புவோருக்கு விசேட பேருந்து , தொடருந்து சேவைகள் ஆரம்பம்!
Local
30 August 2026
விசாரணைக்கு விரைவில் முன்னிலையாவார் ரவி கருணாநாயக்க - சட்டத்தரணிகள் உறுதி!
Local
30 August 2026
நண்பகல் 12.11 மணிக்கு என்ன நடக்கும்? : சூரியனின் உச்சத்தால் இலங்கையில் ஏற்படப்போகும் மாற்றம்!
Local
30 August 2026
பேரழிவுக்கு நடுவே ஒரு நம்பிக்கை ஒளி : நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 97 வயது மூதாட்டியின் நெகிழ்ச்சி சம்பவம்!
Local
30 August 2026
எதிர்கால மனைவிக்கு நிலவையே பரிசளித்த தமிழக வாலிபர்: இணையத்தில் வைரலாகும் வியப்பு செய்தி!
Local
30 August 2026
பால் மா, யோகட் விலை உயர்ந்ததாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்: நுகர்வோர் விவகார அதிகாரசபை விளக்கம்!
Local
30 August 2026
இலங்கை வந்தடைந்தார் நடிகை அபிராமி: 'விருமாண்டி' அன்னலட்சுமியைக் கண்டு உற்சாகத்தில் ரசிகர்கள்!
Local
30 August 2026
எல் நினோ வறட்சி: இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் அபாயம் குறித்து எச்சரிக்கை
Local
30 August 2026