தமிழக சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் சிற்றூந்து வழங்குவது தொடர்பான விவாதத்தின்போது, தி.மு.க. ஆட்சியில் நடத்தப்பட்ட சிற்றூந்து பந்தயம் தொடர்பாக ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிற்றூந்துகள் வழங்குவதால் என்ன பயன் என தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், தொகுதிகளுக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளை ஆய்வு செய்து பணியாற்றுவதற்காகவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிற்றூந்துகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய உதயநிதி, அரச கஜானாவில் பணம் இல்லை என கூறப்படும் நிலையில், சிற்றூந்துகள் வாங்குவதற்கான நிதி எவ்வாறு கிடைக்கிறது எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், தி.மு.க. ஆட்சியில் சிற்றூந்து பந்தயம் நடத்துவதற்காக ரூ.24 கோடி செலவிடப்பட்டதாகக் குறிப்பிட்டதுடன், “அந்தப் பணம் யாருடையது? அது உங்கள் வீட்டுப் பணமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் அமைச்சர் நேரு, உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது சர்வதேச தரத்தில் சிற்றூந்து பந்தயம் நடத்தப்பட்டதாகவும், அதற்கு பலரும் பாராட்டு தெரிவித்ததாகவும் கூறினார்.
மேலும், செங்கோட்டையன் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் பதக்கங்களுக்காக ரூ.10 கோடி செலவிடப்பட்டதாகவும் நேரு பதிலடி கொடுத்தார்.
தொடர்ந்து அமைச்சர் அருண்ராஜ், தி.மு.க. ஆட்சியில் நிதி நெருக்கடி இருப்பதாகக் கூறியபோதும், கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்தது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதனால் சட்டசபையில் ஆளும் தரப்பினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Latest News
சிரிக் நகர தாக்குதலுக்குப் பதிலடி: ஜோர்தான் படைத்தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
Local
02 September 2026
இன்றைய வானிலை எப்படி? : கடலுக்குச் செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
Local
02 September 2026
22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை இன்றும் தொடர்கிறது
Local
02 September 2026
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி அதிகரிப்பு
Local
02 September 2026
தமிழக சட்டப்பேரவையை ஆக்கிரமிக்கும் மன்மத வணக்கம்
Local
02 September 2026
125 மில்லியன் பவுண்ட் ஒப்பந்தம் செய்து கொண்ட ஆர்ஜன்டீன வீரர் என்சோ பெர்னாண்டஸ்
Local
02 September 2026
இலங்கையின் பொதுக்கடன் 33 ட்ரில்லியன்களாக அதிகரித்துள்ளது.
Local
02 September 2026
கொழும்பு துறைமுகத்தில் போதைவஸ்து மீட்பு: சர்வதேச வலையமைப்பு குறித்து விசாரணை
Local
02 September 2026
வறண்ட காலநிலை: 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
Local
02 September 2026
சுரங்கப்பாதைகளில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.
Local
02 September 2026