காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதையான Belonging: A Journey of Love நூலை இந்தியாவில் வெளியிடவில்லை என பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி, தனது வாழ்க்கை அனுபவங்களை 544 பக்கங்களைக் கொண்ட சுயசரிதை நூலாக எழுதியுள்ளார்.
Belonging: A Journey of Love எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நூலை, பென்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் Alfred A. Knopf பதிப்பகம் சர்வதேச அளவில் வெளியிடத் திட்டமிட்டிருந்தது. இதன்படி, எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி நூல் வெளியிடப்படவிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சோனியா காந்தியின் சுயசரிதையை இந்தியாவில் வெளியிடும் பணியில் இருந்து பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா விலகியதாகத் தகவல்கள் வெளியாகின.
கையெழுத்துப் பிரதியில் சில மாற்றங்கள் மற்றும் நீக்கங்களை மேற்கொள்ள பதிப்பகம் பரிந்துரைத்ததாகவும், அவற்றை சோனியா காந்தி ஏற்க மறுத்ததன் காரணமாகவே வெளியீட்டு நிறுவனம் விலகியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம், சோனியா காந்தியின் சுயசரிதையை வெளியிட தாங்கள் ஆர்வம் கொண்டிருந்தது உண்மை என்றும், ஆனால் அந்த நூலை இந்தியாவில் தாங்கள் வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், ஆசிரியர் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களை ஏற்க மறுத்ததால் நூலை வெளியிட வேண்டாம் என நிறுவனம் முடிவு செய்ததாக வெளியாகியுள்ள தகவல் உண்மையல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஒரு பதிப்பாளராக நூலில் இடம்பெறும் தகவல்களைச் சரிபார்ப்பதும், நூலின் தரம் மற்றும் நலனைக் கருத்தில்கொண்டு ஆசிரியருக்கு பரிந்துரைகளை வழங்குவதும் தங்களின் உரிமையும் பொறுப்பும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது பதிப்பகப் பணியின் இயல்பான ஒரு பகுதி என்றும், இதற்கும் சோனியா காந்தியின் சுயசரிதையை வெளியிடாததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
எனினும், சோனியா காந்தியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பான மேலதிக விவரங்களை வெளியிட பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது.
இதற்கிடையில், சோனியா காந்தியின் சுயசரிதையை வெளியிட பல்வேறு இந்திய பதிப்பகங்கள் ஆர்வம் காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், ஹார்பர் காலின்ஸ் நிறுவனத்துடன் நூல் வெளியீட்டுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோனியா காந்தி, ராஜீவ் காந்தியுடனான காதல் மற்றும் திருமண வாழ்க்கை தொடங்கி, தனது அரசியல் பயணம் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் வரையிலான பல்வேறு விவரங்களை இந்த சுயசரிதையில் விரிவாகப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், Belonging: A Journey of Love நூல் மீது அரசியல் வட்டாரங்களிலும் வாசகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Latest News
பெற்றோல் விலை குறைப்பு - முச்சக்கர வண்டி கட்டணம் குறையுமா?
Local
31 August 2026
என்னை வைத்து படம் எடுத்தால் படம் 100 கோடி ஹிட்டடிக்கும் - வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் பேச்சு!
Local
31 August 2026
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்குப் பிணை
Local
31 August 2026
இலக்கைக் கடந்தது அரசாங்கத்தின் நெல் கொள்வனவு: 46,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகம் கொள்முதல்!
Local
31 August 2026
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது: பிரதான காரணத்தை வெளியிட்ட கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு
Local
31 August 2026
கடல் ஆரோக்கியத்தின் முக்கிய குறிகாட்டியான பவளப்பாறைகள் அழிவின் விளிம்பில்: வெளியானது அதிர்ச்சி அறிக்கை!
Local
31 August 2026
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : இன்று மீண்டும் குறைந்தது தங்க விலை!
Local
31 August 2026
பிரபல இலங்கை மொடல் சூலாபத்மேந்திர காலமானார்!
Local
31 August 2026
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் அதிகரிப்பு!
Local
31 August 2026
ஜி.வி. பிரகாஷ் படத்தின் விளம்பர நிகழ்ச்சியைத் தவிர்த்தாரா கயாடு லோஹர்? - சமூக வலைதளங்களில் விவாதம்
Local
31 August 2026