நேபாளத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, சுமார் 200 கிலோமீற்றர் தொலைவை கடந்து இந்தியாவுக்குள் நுழைந்துள்ள நிலையில், மனித உடலங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் புதன்கிழமை காலை போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, நேபாளத்தின் பல பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
வெள்ளப்பெருக்கில் ஆற்றின் கரையோரங்களில் இருந்த கட்டடங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவை கண்டகி ஆற்றின் வழியாக இந்தியாவுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கண்டகி ஆற்றில் இருந்து நான்கு பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இதுகுறித்து நேபாள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், குஷிநகர் பகுதியில் இருந்து மேலும் மூன்று பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மீட்கப்பட்ட ஏழு பேரின் உடலங்களின் புகைப்படங்கள் நேபாள அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பேரழிவில் இதுவரை 472 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 469 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சுமார் 1,400 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளப்பெருக்கினால் பல கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Latest News
ரவி மோகன் – கெனிஷா புகைப்பிடிக்கும் காட்சியால் பரபரப்பு : கோவா காணொளியால் பரவும் புதிய சர்ச்சை!
Local
08 September 2026
டிட்வா பேரழிவினால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு கடன் நிதியுதவி
Local
08 September 2026
16 மணி நேர நரகம், 21 உயிரிழப்புகள்: வானூர்தி கடத்தலில் தப்பிய 15 வயதுச் சிறுமியின் இன்றைய நெகிழ்ச்சிப் பதிவு!
Local
08 September 2026
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்: நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி
Local
08 September 2026
2030ஆம் ஆண்டுக்குள் விலங்குகளுடன் மனிதர்கள் உரையாட முடியுமா? AI ஆய்வில் புதிய தகவல்
Local
08 September 2026
தனியார் துறைக்கும் இணையவழி தொடருந்து பருவகாலச் சீட்டு - ஒக்டோபர் 1 முதல் வீட்டிலிருந்தே பெறலாம்!
Local
08 September 2026
அம்பிட்டியே சுமனரதன தேரருக்கு விளக்கமறியல்
Local
08 September 2026
லண்டனில் அஜித் பங்கேற்கும் சிற்றுந்து பந்தயத்தை நேரில் காண முதலமைச்சர் விஜய் திட்டம்?
Local
08 September 2026
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்!
Local
08 September 2026
தமிழக சட்டமன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு: சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக - பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள்!
Local
08 September 2026