நேபாளத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, சுமார் 200 கிலோமீற்றர் தொலைவை கடந்து இந்தியாவுக்குள் நுழைந்துள்ள நிலையில், மனித உடலங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் புதன்கிழமை காலை போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, நேபாளத்தின் பல பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
வெள்ளப்பெருக்கில் ஆற்றின் கரையோரங்களில் இருந்த கட்டடங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவை கண்டகி ஆற்றின் வழியாக இந்தியாவுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கண்டகி ஆற்றில் இருந்து நான்கு பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இதுகுறித்து நேபாள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், குஷிநகர் பகுதியில் இருந்து மேலும் மூன்று பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மீட்கப்பட்ட ஏழு பேரின் உடலங்களின் புகைப்படங்கள் நேபாள அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பேரழிவில் இதுவரை 472 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 469 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சுமார் 1,400 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளப்பெருக்கினால் பல கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Latest News
அம்பாறை, மட்டக்களப்பில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கடும் வீழ்ச்சி: சீயம்பலாண்டுவையில் குழாய் கிணறுகள் திருத்தம்
Local
07 September 2026
குடும்ப மருத்துவர் முறைமை மற்றும் 'ஆரோக்கிய' மையங்கள் மூலம் சுகாதாரத் துறையில் புதிய சீர்திருத்தம்: ஜனாதிபதி
Local
07 September 2026
புடாபெஸ்டில் வரலாற்றுச் சமர்: ஈட்டி எறிதலில் உலகின் முதன்மை வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை வீரன்!
Local
07 September 2026
டெங்கு எச்சரிக்கை: உயிரிழப்புகள் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை!
Local
07 September 2026
தொடர் பயணங்களால் ஆபத்து: வாசனா யானை தொடர்பில் கதிர்காம தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Local
07 September 2026
இந்தோனேசிய எரிமலை வெடிப்பு: ஸ்ரீலங்கன் வானூர்திகள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன!
Local
06 September 2026
"அரசாங்கத்தால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது; மக்களும் இணைய வேண்டும்" - டில்வின் சில்வா வலியுறுத்தல்
Local
06 September 2026
புதிய பச்சை நிற இலக்கத் தகடு: அறியாத காவல்துறையினரால் வாகன உரிமையாளர் அசௌகரியம்
Local
06 September 2026
தேயிலை ஏற்றுமதி வருமானத்துக்கு நிகரான 1 பில்லியன் டொலர் கடத்தப்பட்டுள்ளது -ஜனாதிபதி
Local
06 September 2026
வெளிநாட்டுப் பயணத்தடை விதிப்பதற்கு முன்பே வெளிநாடு சென்றார் பிரேமலால் ஜயசேகர: சிஐடி தகவல்
Local
06 September 2026