விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவப் பிரிவினரிடையே மோதல்களை உருவாக்கி, நாட்டின் இலவச சுகாதார சேவையை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு எதிராக எதிர்கால நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)தெரிவித்துள்ளது.
இலவச சுகாதார சேவையை சர்வதேசத் தரத்தில் கொண்டு செல்வதற்கு அனைத்து மருத்துவப் பிரிவினருக்கும் இடையிலான ஒத்துழைப்பும், அமைப்பின் உள் ஸ்திரத்தன்மையும் அத்தியாவசியமானது என அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக, விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட மருத்துவர்களை நாட்டிற்குள் தக்கவைத்துக்கொள்வது பெரும் சவாலாக மாறியிருந்தது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
அதில், அனைத்து மருத்துவப் பிரிவினரையும் நாட்டிற்குள் தக்கவைத்துக்கொள்வதற்காக 'இலங்கை மருத்துவ சேவை' என்ற பெயரில் புதிய சேவைப் பிரிவையும் வேதன அமைப்பையும் நிறுவுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக அந்தச் ங்கம் குறிப்பிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான பாதீட்டின் மூன்றாவது வாசிப்பின் போதும், விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களையும் நாட்டில் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறானதொரு தனிச் சேவைப் பிரிவு உருவாக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், தற்போது விசேட வைத்திய நிபுணர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாகத் தனிச் சேவைப் பிரிவை உருவாக்குவதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மருத்துவப் பிரிவினரிடையே பிளவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அந்தச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட மருத்துவப் பிரிவுக்கு மட்டும் தனிச் சேவைப் பிரமாணக் குறிப்பை உருவாக்குவது இலவச சுகாதார சேவைக்கும் நோயாளி பராமரிப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த யோசனைக்குத் தமது சங்கம் உடன்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வமான கருத்துக்கள் உரிய குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கையின் பிரதியை வழங்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை அது வழங்கப்படவில்லை என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இலவச சுகாதார சேவையை சர்வதேசத் தரத்தில் கொண்டு செல்வதற்கு அனைத்து மருத்துவப் பிரிவினருக்கும் இடையிலான ஒத்துழைப்பும், அமைப்பின் உள் ஸ்திரத்தன்மையும் அத்தியாவசியமானது என அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக, விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட மருத்துவர்களை நாட்டிற்குள் தக்கவைத்துக்கொள்வது பெரும் சவாலாக மாறியிருந்தது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
அதில், அனைத்து மருத்துவப் பிரிவினரையும் நாட்டிற்குள் தக்கவைத்துக்கொள்வதற்காக 'இலங்கை மருத்துவ சேவை' என்ற பெயரில் புதிய சேவைப் பிரிவையும் வேதன அமைப்பையும் நிறுவுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக அந்தச் ங்கம் குறிப்பிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான பாதீட்டின் மூன்றாவது வாசிப்பின் போதும், விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களையும் நாட்டில் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறானதொரு தனிச் சேவைப் பிரிவு உருவாக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், தற்போது விசேட வைத்திய நிபுணர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாகத் தனிச் சேவைப் பிரிவை உருவாக்குவதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மருத்துவப் பிரிவினரிடையே பிளவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அந்தச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட மருத்துவப் பிரிவுக்கு மட்டும் தனிச் சேவைப் பிரமாணக் குறிப்பை உருவாக்குவது இலவச சுகாதார சேவைக்கும் நோயாளி பராமரிப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த யோசனைக்குத் தமது சங்கம் உடன்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வமான கருத்துக்கள் உரிய குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கையின் பிரதியை வழங்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை அது வழங்கப்படவில்லை என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Latest News
"குற்றம் செய்தவருக்கே அதன் தீவிரம் தெரியும்": நாமல் ராஜபக்ஷ குறித்து அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கருத்து!
Local
03 September 2026
ஹோர்முஸ் நீரிணைக்கு 'ட்ரம்ப் நீரிணை' என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
Local
03 September 2026
தண்டனையிலிருந்து விலகும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - மனித உரிமைகளை கண்காணிக்கும் அமைப்பு அரசாங்கத்திற்கு அழுத்தம்
Local
03 September 2026
ஊழல் தடுப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
Local
03 September 2026
அமெரிக்காவின் $1 நாணயத்தில் டொனால்ட் ட்ரம்பின் உருவம்: அதிகாரப்பூர்வமாகப் புழக்கத்திற்கு வந்தது!
Local
03 September 2026
கொழும்பின் பல பகுதிகளில் இன்று 24 மணி நேர நீர் விநியோகம் தடை
Local
03 September 2026
பொரளை – சஹஸ்புர பகுதியில் காவல்துறை துப்பாக்கிச்சூடு : ஐவர் கைது
Local
03 September 2026
விஜய் வெற்றியால் மாறிய திட்டம் : ஜெயிலர் 2 திரைப்படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்க ரஜினி முடிவு!
Local
03 September 2026
22வது அரசியலமைப்புத் திருத்த வழக்கு: இளம் சட்டத்தரணிகளின் பங்களிப்பைப் பாராட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்!
Local
03 September 2026
உலகளாவிய அரசியல் பதற்றம் : அமெரிக்காவிலிருந்த தங்கத்தை திடீரென லண்டனுக்கு மாற்றிய நெதர்லாந்து!
Local
03 September 2026