General30 August 2026

திருகோணமலையில் கனரக வாகனத்துடன் உந்துருளி மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் கனரக வாகனமும் உந்துருளியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தம்பலகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கனரக வாகனமும், தம்பலகாமத்திலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற உந்துருளியும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் உந்துருளியைச் செலுத்திச் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கந்தளாய் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes