சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான நீள் பயணம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இன்று (30) நடைபெற்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்தப் பேரணி, யாழ்ப்பாணம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவிடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து ஆரம்பமானது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் நிழற்படங்கள் தாங்கிய விசேட வாகனம் பேரணியின் முன்னிலையில் செல்ல, உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் நிழற்படங்களை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.
பல ஆண்டுகளாகக் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு உண்மை மற்றும் நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதில் கலந்துகொண்டனர்.
உலகளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாகக் கருதப்படும் நிலையில், தமக்கான நீதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
யாழ்ப்பாண நகரின் ஊடாகச் சென்ற பேரணி, தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்ட மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்தப் பேரணி, யாழ்ப்பாணம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவிடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து ஆரம்பமானது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் நிழற்படங்கள் தாங்கிய விசேட வாகனம் பேரணியின் முன்னிலையில் செல்ல, உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் நிழற்படங்களை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.
பல ஆண்டுகளாகக் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு உண்மை மற்றும் நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதில் கலந்துகொண்டனர்.
உலகளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாகக் கருதப்படும் நிலையில், தமக்கான நீதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
யாழ்ப்பாண நகரின் ஊடாகச் சென்ற பேரணி, தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்ட மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
Latest News
22ஆவது திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் நாளை பரசீலனைக்கு!
Local
31 August 2026
இன்று (31) நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுடைய பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு
Local
31 August 2026
ஹோர்முஸ் நீரிணை அருகே ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!
Local
31 August 2026
நேபாளத்தில் அடையாளம் தெரியாத உடல்களை கூட்டாக அடக்கம் செய்யும் பணிகள் தீவிரம்!
Local
31 August 2026
57 வருட சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!
Local
31 August 2026
பமுனுகம - எப்பாமுல்ல கடலில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த 13 வயதுச் சிறுவனின் உடலமும் மீட்பு
Local
31 August 2026
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது!
Local
31 August 2026
இங்கிலாந்து தொடர்: இலங்கை ஒருநாள் குழாமில் மீண்டும் தசுன் ஷானக!
Local
31 August 2026
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுகள்- சபாநாயகரிடம் எழுத்துப்பூர்வ விளக்கத்தை கோரினார் தயாசிறி ஜயசேகர
Local
31 August 2026
உலகின் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று: பிரதமர் மோடி பெருமிதம்!
Local
31 August 2026