நுவரெலியா, பொரலந்த விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறில், கணவனின் தாக்குதலுக்கு இலக்கான 43 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த பெண், சிகிச்சைக்காக நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், கூரிய ஆயுதத்தால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான, குறித்த பெண்ணினுடைய கணவர் நுவரெலியா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சரணடைந்த சந்தேக நபரை இன்று (30) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த பெண், சிகிச்சைக்காக நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், கூரிய ஆயுதத்தால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான, குறித்த பெண்ணினுடைய கணவர் நுவரெலியா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சரணடைந்த சந்தேக நபரை இன்று (30) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியது
Local
01 September 2026
வலைகளில் சிக்குண்ட பென்குயின்களுக்கு வரப்பிரசாதமாகும் நவீன உடை: சிலி ஆராய்ச்சியாளர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!
Local
01 September 2026
22வது திருத்தச் சட்டமூல மனுக்கள்: பூரண அமர்வு கோரிக்கை நிராகரிப்பு!
Local
01 September 2026
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
Local
01 September 2026
22ஆவது திருத்தச் சட்டமூல மனுக்கள் மீதான பரிசீலனை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு!
Local
01 September 2026
பிரபல நடிகருக்கு H1N1 பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி : அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் கவலை!
Local
01 September 2026
ரொஷான் அமரசிங்க CID பணிப்பாளராக நியமனம்!
Local
01 September 2026
நகைப் பிரியர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு : இன்றைய தங்க விலை நிலவரம் இதோ!
Local
01 September 2026
சுயசரிதை எழுதுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!
Local
01 September 2026
மேசை பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் தாவி சமரவீர
Local
01 September 2026