நுவரெலியா, பொரலந்த விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறில், கணவனின் தாக்குதலுக்கு இலக்கான 43 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த பெண், சிகிச்சைக்காக நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், கூரிய ஆயுதத்தால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான, குறித்த பெண்ணினுடைய கணவர் நுவரெலியா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சரணடைந்த சந்தேக நபரை இன்று (30) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த பெண், சிகிச்சைக்காக நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், கூரிய ஆயுதத்தால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான, குறித்த பெண்ணினுடைய கணவர் நுவரெலியா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சரணடைந்த சந்தேக நபரை இன்று (30) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
PAYE வரிச் சுமையை உடனடியாகக் குறைக்க வேண்டும் - ஜனாதிபதி செயலாளர்!
Local
02 September 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு : யாழ். மற்றும் குருநாகல் மாணவர்கள் முன்னிலை
Local
02 September 2026
சேதவத்த கசுனுக்குச் சொந்தமான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
Local
02 September 2026
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு தயார் - நாமல்
Local
02 September 2026
பழச் செய்கையாளர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்
Local
02 September 2026
லண்டனில் தொடங்கியது த்ரிஷாவின் புதிய படப்பிடிப்பு!
Local
02 September 2026
பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களைத் தண்டித்தால் கடும் நடவடிக்கை
Local
02 September 2026
22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற பரிசீலனைகள் நிறைவு - வியாக்கியானம் சபாநாயகருக்கு!
Local
02 September 2026
கச்சத்தீவு விவகாரத்தால் உச்சக்கட்டப் பரபரப்பு – ஆளும், எதிர்க்கட்சிகள் இடையே அனல் பறந்த விவாதம்!
Local
02 September 2026
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு: 56,000 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி!
Local
02 September 2026