General31 August 2026

பிரதமர் ஹரிணி பூட்டான் பயணமானார்!

விழிப்புணர்வுள்ள உணவு முறைமைகள் பற்றிய உலகளாவிய உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (31) காலை பூட்டான் நோக்கிப் பயணமானார்

பூட்டானில் நாளை (1) நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் ஆரம்ப அமர்வில் கலந்துகொள்ளும் பிரதமர், "தருணத்திற்கேற்ப எழுச்சி பெறல்: பன்முக நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்" என்ற தலைப்பில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக பிரமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, நிலையான உணவு முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் மீள்திறன் மிக்க சமூகங்களை உருவாக்குவது தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் விசேட கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes