General31 August 2026

இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒரே வாரத்தில் சாதனை வருமானம்!

கடந்த வாரம் ஐந்த நாள் தொடர் விடுமுறை காலத்தில் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக 355 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் அனுராத ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கடந்த வாரத்தில் மட்டும் (திங்கள் முதல் ஞாயிறு வரை) அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் அந்த அதிகாரசபையானது 408 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தைப் ஈட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, குறிப்பிட்ட காலப்பகுதியில் (ஆகஸ்ட் 24 முதல் 30 வரை), தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு வெளிச்சுற்றுவட்ட வீதி மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை என்பவற்றில் மொத்தம் 1,095,895 வாகனங்கள் பயணம் செய்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes