General02 September 2026

கொழும்பு துறைமுகத்தில் போதைவஸ்து மீட்பு: சர்வதேச வலையமைப்பு குறித்து விசாரணை

கொழும்பு துறைமுகத்தின், கொள்கலன் ஒன்றில் இருந்து சுமார் 472 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதை அடுத்துஇ சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு குறித்துக் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

துபாயில் இருந்து தப்பியோடி தற்போது பாகிஸ்தானில் தங்கியிருப்பதாக நம்பப்படும் "பரவி சுதா" என்ற போதைப்பொருள் கடத்தல்காரரே, இந்த போதைப்பொருள் தொகையை இலங்கைக்கு அனுப்பியிருக்கலாம் எனக் காவல்துறை சந்தேகிக்கிறது.

அத்துடன் "அங்கொட பிரியந்த" மற்றும் "ரூபன்" என்ற நபர்களும் இந்த நடவடிக்கையில் தொடர்புபட்டிருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் முன்றலில் கடந்த 31 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்தப் போதைப்பொருள் மீட்கப்பட்;டுள்ளது.

வெளிநாட்டைச் சேர்ந்த தனிப்பட்ட தகவல் வழங்குநரிடம் இருந்து கிடைத்த தகவலை அடுத்துஇ சிரேஷ்ட காவல்துறை மாஅதிச்சரகத்தின் ஊடாக இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவைப் பெற்றுஇ காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இலங்கைச் சுங்கப் பிரிவினரும் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.

இந்தக் கொள்கலன் மொNராக்கோவிற்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்துவதே உண்மையான நோக்கமாகும் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

கொழும்பைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் உட்பட பாகிஸ்தானிய நாட்டவர்கள் இருவர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes