General02 September 2026

பழச் செய்கையாளர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

பழச் செய்கையாளர்களுக்காக விவசாய மற்றும் காப்பீட்டு சபையினால் புதிய காப்பீட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பழச் செய்கைக்கு ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் கீழ் அன்னாசி, பப்பாசி, வாழை மற்றும் விவசாய திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்படும் ஏனைய பயிர்களுக்கும் காப்பீடு பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள விவசாயிகள் அடிப்படை காப்பீட்டுத் தொகையில் சுமார் 7 சதவீதத்தை மாத்திரம் பிரீமியமாகச் செலுத்த வேண்டும்.

இயற்கை பேரழிவுகள், நோய்கள், கிருமித் தாக்குதல்கள், பூச்சிகள் மற்றும் காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்களுக்கு இதன் மூலம் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

பயிர்களுக்குச் சேதம் ஏற்படும் பட்சத்தில், ஒரு ஏக்கருக்கு 300,000 முதல் 400,000 ரூபாய் வரை நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது.

இடர் நிர்வாகத்தை முறைப்படுத்துவதன் ஊடாக விவசாயிகள் தொடர்ந்தும் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருவதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம் என விவசாய மற்றும் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes