நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் காணாமல் போன தனது ஒரே மகனைக் கண்டுபிடிக்க, ஏழைத் தந்தை ஒருவர் கடன் வாங்கி, பல கிலோமீற்றர் தூரம் கால்நடையாகத் தேடி அலைந்து வரும் சோக சம்பவம் வெளியாகியுள்ளது.
நேபாளத்தின் தராய் (Terai) பகுதியைச் சேர்ந்த டல்கா சாதா (Talka Sada) என்பவரின் 19 வயது மகன் வினோத், ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் உள்ள நீர்மின் நிலையத் திட்டப் பகுதி ஒன்றில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி போட்டேகோஷி ஆற்றினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், அந்த நீர்மின் நிலையப் பகுதியில் இருந்த வினோத் உட்பட பல தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.
மிகவும் வறுமை நிலையில் உள்ள டல்கா சாதா, நூறு ரூபாய்க்கு இருபது ரூபாய் வட்டி என்ற அதிக வட்டிக்கு 2,000 நேபாள ரூபாய்களைக் (சுமார் 13 அமெரிக்க டொலர்) கடனாகப் பெற்றுள்ளார்.
அந்தப் பணத்தைக் கொண்டு தனது சகோதரருடன் தலைநகர் காத்மண்டு வருகை தந்த அந்த நபர் மருத்துவமனைகளில் தனது மகன் கிடைக்காததால், சேதமடைந்த மலைப்பாதைகள் வழியே அவர் தனது மகன் பணியாற்றிய நுவாகோட் நீர்மின் நிலையத்தை நோக்கி கால்நடையாகத் தேடிச் செல்கிறார்.
இந்த நிலையில் , இராணுவ முகாம்களும் காவல்துறை அதிகாரிகளும் தங்களுக்கு உரிய உதவிகளை வழங்காமல் அலட்சியப்படுத்துவதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி வருவதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தின் தராய் (Terai) பகுதியைச் சேர்ந்த டல்கா சாதா (Talka Sada) என்பவரின் 19 வயது மகன் வினோத், ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் உள்ள நீர்மின் நிலையத் திட்டப் பகுதி ஒன்றில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி போட்டேகோஷி ஆற்றினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், அந்த நீர்மின் நிலையப் பகுதியில் இருந்த வினோத் உட்பட பல தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.
மிகவும் வறுமை நிலையில் உள்ள டல்கா சாதா, நூறு ரூபாய்க்கு இருபது ரூபாய் வட்டி என்ற அதிக வட்டிக்கு 2,000 நேபாள ரூபாய்களைக் (சுமார் 13 அமெரிக்க டொலர்) கடனாகப் பெற்றுள்ளார்.
அந்தப் பணத்தைக் கொண்டு தனது சகோதரருடன் தலைநகர் காத்மண்டு வருகை தந்த அந்த நபர் மருத்துவமனைகளில் தனது மகன் கிடைக்காததால், சேதமடைந்த மலைப்பாதைகள் வழியே அவர் தனது மகன் பணியாற்றிய நுவாகோட் நீர்மின் நிலையத்தை நோக்கி கால்நடையாகத் தேடிச் செல்கிறார்.
இந்த நிலையில் , இராணுவ முகாம்களும் காவல்துறை அதிகாரிகளும் தங்களுக்கு உரிய உதவிகளை வழங்காமல் அலட்சியப்படுத்துவதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி வருவதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Latest News
வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கு : முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவு
Local
17 September 2026
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைது
Local
17 September 2026
2026 ஆசிய விளையாட்டு விழாவுக்குச் செல்லும் இலங்கை அணிக்கு Dialog Axiata PLC அனுசரணை
Local
17 September 2026
சர்வதேச மாணவர்களுக்கான விசா விதிகளில் அதிரடி மாற்றம் : அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய கட்டுப்பாடு!
Local
17 September 2026
பங்களாதேஷில் தீவிரமடையும் தட்டம்மை நோய்: 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி
Local
17 September 2026
"அப்பா முதலமைச்சர்... விளம்பரத்தில் அரசியல் வேண்டாம்" – மகன் ஜேசன் சஞ்சய் வெளிப்படை!
Local
17 September 2026
காவல்துறை நற்சான்றிதழ் விண்ணப்பங்களில் சிக்கலா? : தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு!
Local
17 September 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை : எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!
Local
17 September 2026
பணிப்புறக்கணிப்புக்கு மத்தியிலும் வழமைபோல் இயங்கும் தொடருந்து சேவைகள்!
Local
17 September 2026
ஆசிய விளையாட்டுப்போட்டிகளுக்கான இலங்கையின் மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு!
Local
17 September 2026