நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் காணாமல் போன தனது ஒரே மகனைக் கண்டுபிடிக்க, ஏழைத் தந்தை ஒருவர் கடன் வாங்கி, பல கிலோமீற்றர் தூரம் கால்நடையாகத் தேடி அலைந்து வரும் சோக சம்பவம் வெளியாகியுள்ளது.
நேபாளத்தின் தராய் (Terai) பகுதியைச் சேர்ந்த டல்கா சாதா (Talka Sada) என்பவரின் 19 வயது மகன் வினோத், ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் உள்ள நீர்மின் நிலையத் திட்டப் பகுதி ஒன்றில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி போட்டேகோஷி ஆற்றினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், அந்த நீர்மின் நிலையப் பகுதியில் இருந்த வினோத் உட்பட பல தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.
மிகவும் வறுமை நிலையில் உள்ள டல்கா சாதா, நூறு ரூபாய்க்கு இருபது ரூபாய் வட்டி என்ற அதிக வட்டிக்கு 2,000 நேபாள ரூபாய்களைக் (சுமார் 13 அமெரிக்க டொலர்) கடனாகப் பெற்றுள்ளார்.
அந்தப் பணத்தைக் கொண்டு தனது சகோதரருடன் தலைநகர் காத்மண்டு வருகை தந்த அந்த நபர் மருத்துவமனைகளில் தனது மகன் கிடைக்காததால், சேதமடைந்த மலைப்பாதைகள் வழியே அவர் தனது மகன் பணியாற்றிய நுவாகோட் நீர்மின் நிலையத்தை நோக்கி கால்நடையாகத் தேடிச் செல்கிறார்.
இந்த நிலையில் , இராணுவ முகாம்களும் காவல்துறை அதிகாரிகளும் தங்களுக்கு உரிய உதவிகளை வழங்காமல் அலட்சியப்படுத்துவதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி வருவதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தின் தராய் (Terai) பகுதியைச் சேர்ந்த டல்கா சாதா (Talka Sada) என்பவரின் 19 வயது மகன் வினோத், ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் உள்ள நீர்மின் நிலையத் திட்டப் பகுதி ஒன்றில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி போட்டேகோஷி ஆற்றினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், அந்த நீர்மின் நிலையப் பகுதியில் இருந்த வினோத் உட்பட பல தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.
மிகவும் வறுமை நிலையில் உள்ள டல்கா சாதா, நூறு ரூபாய்க்கு இருபது ரூபாய் வட்டி என்ற அதிக வட்டிக்கு 2,000 நேபாள ரூபாய்களைக் (சுமார் 13 அமெரிக்க டொலர்) கடனாகப் பெற்றுள்ளார்.
அந்தப் பணத்தைக் கொண்டு தனது சகோதரருடன் தலைநகர் காத்மண்டு வருகை தந்த அந்த நபர் மருத்துவமனைகளில் தனது மகன் கிடைக்காததால், சேதமடைந்த மலைப்பாதைகள் வழியே அவர் தனது மகன் பணியாற்றிய நுவாகோட் நீர்மின் நிலையத்தை நோக்கி கால்நடையாகத் தேடிச் செல்கிறார்.
இந்த நிலையில் , இராணுவ முகாம்களும் காவல்துறை அதிகாரிகளும் தங்களுக்கு உரிய உதவிகளை வழங்காமல் அலட்சியப்படுத்துவதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி வருவதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Latest News
கைதுக்கு எதிரான சுரேஷ் சலேயின் மனு: மேன்முறையீட்டு நீதிமன்றம் நவம்பர் 27இல் உத்தரவு!
Local
18 September 2026
தொடருந்து பொது முகாமையாளருக்கு எதிராக கையூட்டல் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
Local
18 September 2026
எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள் - கண்ணீர் மல்க தாயார் கோரிக்கை
Local
18 September 2026
ரீல்ஸ் மட்டும்தான் வந்தது, முதலீடு வரவில்லை - முதலமைச்சர் விஜய் மீது பாயும் விமர்சனங்கள்
Local
18 September 2026
"அவருடன் நடித்ததே பெருமை!" தளபதி விஜய் குறித்து நடிகை மமிதா பைஜூ வெளியிட்ட நெகிழ்ச்சி தகவல்!
Local
18 September 2026
வடகிழக்கு பாகிஸ்தானில் அதிர்ச்சி: பள்ளிவாசலில் வெடிப்புச் சம்பவம்! - 17 பேர் உயிரிழப்பு
Local
18 September 2026
அஜித்தின் புதிய திரைப்படம் - அடுத்தடுத்து விலகும் முன்னணி நடிகர்கள் - வெளியான அதிர்ச்சி காரணம்
Local
18 September 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் பின் இருக்கை பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்
Local
18 September 2026
அனைத்து சாதனைகளும் தகர்க்கப்பட்டன! மலையாள திரையுலகின் புதிய வசூல் சக்கரவர்த்தியாக உருவெடுத்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்'!
Local
18 September 2026
வில்பத்து தேசிய பூங்கா எல்லையில் மருத மரங்கள் எரிப்பு - உடனடி விசாரணைக்கு சுற்றாடல் அமைச்சு உத்தரவு!
Local
18 September 2026