தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) வேட்பாளர் வி.எஸ்.பாபு பெற்ற வெற்றியை எதிர்த்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (03) காலை 10:30 க்கு வழங்கவுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க வேட்பாளர் வி.எஸ்.பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு இரண்டாமிடத்தைப் பெற்ற மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, குறித்த தொகுதியிலுள்ள 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (விவிபேட்) இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.
இதன்போது பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டி, மு.க.ஸ்டாலின் தரப்பினால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனுவில், வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் நடவடிக்கையின் போது சில இயந்திரங்கள் திடீரெனக் கோளாறடைந்து செயலிழந்ததாகவும், 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்த போது பாரிய முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, குறித்த தொகுதியின் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட்களை மீண்டும் முழுமையாகச் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்றும், த.வெ.க உறுப்பினரான வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லுபடியற்றதாக அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுதாரரான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த வாரம் இடம்பெற்ற விசாரணைகளின் போது மனுதாரர் மு.க.ஸ்டாலின் தரப்பு, இந்தியத் தேர்தல் ஆணைக்குழு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு தரப்பு நியாயாதிக்கங்கள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே, குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை காலை 10:30 க்கு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க வேட்பாளர் வி.எஸ்.பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு இரண்டாமிடத்தைப் பெற்ற மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, குறித்த தொகுதியிலுள்ள 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (விவிபேட்) இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.
இதன்போது பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டி, மு.க.ஸ்டாலின் தரப்பினால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனுவில், வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் நடவடிக்கையின் போது சில இயந்திரங்கள் திடீரெனக் கோளாறடைந்து செயலிழந்ததாகவும், 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்த போது பாரிய முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, குறித்த தொகுதியின் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட்களை மீண்டும் முழுமையாகச் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்றும், த.வெ.க உறுப்பினரான வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லுபடியற்றதாக அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுதாரரான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த வாரம் இடம்பெற்ற விசாரணைகளின் போது மனுதாரர் மு.க.ஸ்டாலின் தரப்பு, இந்தியத் தேர்தல் ஆணைக்குழு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு தரப்பு நியாயாதிக்கங்கள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே, குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை காலை 10:30 க்கு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
பிரித்தானியாவின் வான்வழி கட்டுப்பாட்டு கோளாறு: ஜெர்மனிக்கு திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வானூர்தி!
Local
09 September 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் தண்டனையைக் குறைக்க கையூட்டல்: நீதிமன்ற உதவியாளர் விளக்கமறியலில்
Local
09 September 2026
செவிப்புலன் வலுவிழந்தோருக்கு 119 அவசர சேவையில் புதிய வட்ஸ்அப் காணொளி வசதி
Local
09 September 2026
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் கொட்டகையைத் தகர்த்து, நீர் கிணறுகளை மூடின
Local
09 September 2026
தனமல்வில பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
Local
08 September 2026
தளபதி பட வெற்றிக்காக இப்படியொரு நேர்த்திக்கடனா? அமைச்சர் தென்னரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்!
Local
08 September 2026
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சீமான்: 'சேயோன்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம்!
Local
08 September 2026
ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி லுக் சேஞ்ச்: சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் நிழற்படங்கள்!
Local
08 September 2026
அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
Local
08 September 2026
இலங்கையில் 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் இறக்குமதி: பயணிகள் போக்குவரத்தில் புதிய மறுமலர்ச்சி!
Local
08 September 2026