தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) வேட்பாளர் வி.எஸ்.பாபு பெற்ற வெற்றியை எதிர்த்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (03) காலை 10:30 க்கு வழங்கவுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க வேட்பாளர் வி.எஸ்.பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு இரண்டாமிடத்தைப் பெற்ற மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, குறித்த தொகுதியிலுள்ள 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (விவிபேட்) இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.
இதன்போது பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டி, மு.க.ஸ்டாலின் தரப்பினால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனுவில், வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் நடவடிக்கையின் போது சில இயந்திரங்கள் திடீரெனக் கோளாறடைந்து செயலிழந்ததாகவும், 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்த போது பாரிய முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, குறித்த தொகுதியின் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட்களை மீண்டும் முழுமையாகச் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்றும், த.வெ.க உறுப்பினரான வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லுபடியற்றதாக அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுதாரரான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த வாரம் இடம்பெற்ற விசாரணைகளின் போது மனுதாரர் மு.க.ஸ்டாலின் தரப்பு, இந்தியத் தேர்தல் ஆணைக்குழு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு தரப்பு நியாயாதிக்கங்கள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே, குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை காலை 10:30 க்கு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க வேட்பாளர் வி.எஸ்.பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு இரண்டாமிடத்தைப் பெற்ற மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, குறித்த தொகுதியிலுள்ள 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (விவிபேட்) இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.
இதன்போது பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டி, மு.க.ஸ்டாலின் தரப்பினால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனுவில், வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் நடவடிக்கையின் போது சில இயந்திரங்கள் திடீரெனக் கோளாறடைந்து செயலிழந்ததாகவும், 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்த போது பாரிய முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, குறித்த தொகுதியின் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட்களை மீண்டும் முழுமையாகச் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்றும், த.வெ.க உறுப்பினரான வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லுபடியற்றதாக அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுதாரரான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த வாரம் இடம்பெற்ற விசாரணைகளின் போது மனுதாரர் மு.க.ஸ்டாலின் தரப்பு, இந்தியத் தேர்தல் ஆணைக்குழு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு தரப்பு நியாயாதிக்கங்கள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே, குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை காலை 10:30 க்கு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் முன்னேற்றம் வரம்பிற்குட்பட்டதாகவே உள்ளது - ஐநா மனித உரிமைகள் அலுவலகம்
Local
08 September 2026
கொழும்பில் சர்வதேச மரதன் போட்டி - உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு!
Local
08 September 2026
அரச நிறுவனங்களில் டிஜிட்டல் புரட்சி: அனைத்துத் துறைகளிலும் புதிய அலகுகளை நிறுவ அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!
Local
08 September 2026
பலத்த காற்று குறித்த எச்சரிக்கை
Local
08 September 2026
ரவி மோகன் – கெனிஷா புகைப்பிடிக்கும் காட்சியால் பரபரப்பு : கோவா காணொளியால் பரவும் புதிய சர்ச்சை!
Local
08 September 2026
டிட்வா பேரழிவினால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு கடன் நிதியுதவி
Local
08 September 2026
16 மணி நேர நரகம், 21 உயிரிழப்புகள்: வானூர்தி கடத்தலில் தப்பிய 15 வயதுச் சிறுமியின் இன்றைய நெகிழ்ச்சிப் பதிவு!
Local
08 September 2026
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்: நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி
Local
08 September 2026
2030ஆம் ஆண்டுக்குள் விலங்குகளுடன் மனிதர்கள் உரையாட முடியுமா? AI ஆய்வில் புதிய தகவல்
Local
08 September 2026
தனியார் துறைக்கும் இணையவழி தொடருந்து பருவகாலச் சீட்டு - ஒக்டோபர் 1 முதல் வீட்டிலிருந்தே பெறலாம்!
Local
08 September 2026