போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த இரு சந்தேகநபர்கள், அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்டு இன்று (03) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குறித்த இரு சந்தேகநபர்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்புப் பிரிவினரின் காவலில் இருந்தபோது, ஈரான் நடத்திய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைகள் தொடர்பான காணொளிகளை தமது கையடக்கத் தொலைபேசிகளில் வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடத்தப்பட்ட இரு சந்தேகநபர்களும் 36 மற்றும் 37 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் மேலதிக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வானூர்தி நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Latest News
உயர் அழுத்த மின் பாதைகள் அருகில் பட்டம் விட வேண்டாம்: தேசிய மின்சார அமைப்பு இயக்கம் எச்சரிக்கை!
Local
04 September 2026
அஸ்கிரிய- மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்
Local
04 September 2026
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகும் நாமல் ராஜபக்ச!
Local
04 September 2026
நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு
Local
04 September 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் வாரத்தில் நாட்டிற்கு வருகை தரவுள்ளது
Local
04 September 2026
கொள்ளுப்பிட்டியில் தொடர்மாடி குடியிருப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்; சந்தேக நபர் கைது!
Local
04 September 2026
அமெரிக்க நியூயோர்க் நகர் பாடசாலைகளில் எட்டாம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவுக்குத் தடை: புதிய தொழில்நுட்பக் கொள்கைகள் அறிவிப்பு
Local
04 September 2026
காஸாவில் ஏழை நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்க கூடார மருத்துவமனை!
Local
04 September 2026
மகளிர் ஆசிய கிண்ணம் : சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
Local
04 September 2026
முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் : நமீபியாவை வீழ்த்தி இறுதிப்போட்டி வாய்ப்பை தக்கவைத்தது ஸிம்பாப்வே!
Local
04 September 2026