General04 September 2026

அஸ்கிரிய- மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த அவர்களின் ஆசி கோரியுள்ளார்.

இதுகுறித்துச் சமூக வலைத்தளப் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ள உயர்ஸ்தானிகர் ஜா, மகாநாயக்க தேரர்களுக்குத் தனது மரியாதையைச் செலுத்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவ உறவை வலுப்படுத்துவதற்கான ஆசிகளைப் பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

டிட்வா பேரிடரைத் தொடர்ந்து இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவு குறித்தும் பௌத்த மதத் தலைவர்களுக்கு உயர்ஸ்தானிகர் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் மக்களுக்குச் குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படும் பல்வேறு திட்டமிடப்பட்ட மற்றும் இருதரப்புத் திட்டங்கள் குறித்தும் அவர் தேரர்களிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes