General04 September 2026

கொள்ளுப்பிட்டியில் தொடர்மாடி குடியிருப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்; சந்தேக நபர் கைது!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி - 6 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes