General04 September 2026

ஹம்பாந்தோட்டை மாநகர முன்னாள் முதல்வர் எராஜ் பெர்னாண்டோ மரணம் - உடற்கூற்றுப் பரிசோதனையில் பகிரங்கத் தீர்ப்பு

ஹம்பாந்தோட்டை மாநகர முன்னாள் முதல்வர் எராஜ் பெர்னாண்டோவின் மரணம் தொடர்பான உடற்கூற்றுப் பரிசோதனையைத் தொடர்ந்து பகிரங்கத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிராந்திய சட்ட மருத்துவ அதிகாரியால்,இந்த உடற்கூற்றுப் பரிசோதனை நேற்று (3) நடத்தப்பட்டது.

இந்தநிலையில், பெர்னாண்டோவின் உடலிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை மேலதிக விசாரணைகள் மற்றும் பரிசோதனைகளுக்காக அரச ஆய்வாளருக்கு அனுப்பும்படி சட்ட மருத்துவ அதிகாரி உத்தரவிட்டார்.

61 வயதான எராஜ் பெர்னாண்டோ, பம்பலப்பிட்டி -திம்பிரிகஸ்யாய பகுதி குடியிருப்பில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் உடலமாக மீட்கப்பட்டார்.

Related recommendation
Hiru TV News | Programmes