அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.
குறித்த சட்டமூலத்திற்கு எதிராக மொத்தம் 15 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவை இரண்டு நாட்களாக மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமே மனுக்களை விசாரித்தது.
வாய்மூல சமர்ப்பணங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், எழுத்துமூல சமர்ப்பணங்கள் இருப்பின் அவற்றை சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் தரப்பினருக்கு அறிவித்துள்ளது.
இதனையடுத்து, குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணக்கமானதா என்பது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மீடியா லா ஃபோரம் மற்றும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உள்ளிட்ட 15 தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த திருத்தச் சட்டமூலத்தின் மூலம் நீதித்துறையின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதுடன், அடிப்படை மனித உரிமைகளும் மீறப்படுவதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த சட்டமூலத்திற்கு எதிராக மொத்தம் 15 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவை இரண்டு நாட்களாக மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமே மனுக்களை விசாரித்தது.
வாய்மூல சமர்ப்பணங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், எழுத்துமூல சமர்ப்பணங்கள் இருப்பின் அவற்றை சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் தரப்பினருக்கு அறிவித்துள்ளது.
இதனையடுத்து, குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணக்கமானதா என்பது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மீடியா லா ஃபோரம் மற்றும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உள்ளிட்ட 15 தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த திருத்தச் சட்டமூலத்தின் மூலம் நீதித்துறையின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதுடன், அடிப்படை மனித உரிமைகளும் மீறப்படுவதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Latest News
நாமலின் கைதை கண்டித்துள்ள ரணிலின் கட்சி
Local
05 September 2026
அமெரிக்காவில் உலுக்கிய மூன்று குழந்தைகளின் வழக்கு: ரத்துச்செய்யப்பட்ட நீதிமன்ற விசாரணை
Local
05 September 2026
நேபாளம்- திபெத் வெள்ளப்பெருக்கு: சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்
Local
05 September 2026
யுக்ரைன் -ரஷ்ய போர்: அமைதி பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்: ட்ரம்ப் அறிவித்தார்
Local
05 September 2026
டென்னிஸ் மைதானத்தில் கஞ்சா வாசனை: முறையிட்ட வீராங்கனை
Local
05 September 2026
காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் திட்டம்: வெளிப்படையாக நிராகரித்த அமெரிக்கா
Local
05 September 2026
சர்வதேச மாணவர்களுக்கான பிரபலமான பட்டயப் படிப்பை அவுஸ்திரேலியா ரத்து செய்தது.
Local
05 September 2026
சிசுவுடன் உயிரிழந்த இளம் தாய் : ஐஸ் போதை மோகத்தால் பறிபோன இரு உயிர்கள்!
Local
04 September 2026
வடக்கு, கிழக்கு மற்றும் பல மாவட்டங்களுக்கு வெப்பமான காலநிலை எச்சரிக்கை!
Local
04 September 2026
கைவசம் 10 வாய்ப்புகள் அடுத்தடுத்து கலக்கத் தயாராகும் அனுபமா பரமேஸ்வரன்!
Local
04 September 2026